மனைவிமார்கள் இந்த 3 வார்த்தையை சொன்னால், சொல் பேச்சு கேட்காத கணவரை கூட, வழிக்கு கொண்டு வரலாம்.

fight
- Advertisement -

இந்த மந்திரம் எல்லா மனைவிமார்களுக்கும் ஒரு வரப் பிரசாதம். நிறைய குடும்பத்தில் சொல்பேச்சு கேட்காத கணவரால் நிம்மதியை இழக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனைவி நல்லதே சொன்னாலும், சில கணவர்களுக்கு காதில் விழவே விழாது. சொல்பேச்சு கேளாமை. ஒரு நல்ல குடும்பம் என்றால் கணவன் சொல்வதை மனைவி கேட்க வேண்டும். மனைவி சொல்வதையும் கணவர் கேட்க வேண்டும். ஆனால் சில வீடுகளில் கணவர் சொல்வதற்கு மட்டும் தான் மனைவி தலையாட்ட வேண்டும். மனைவி பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் கூட, நீ வாயை மூடு என்று சொல்லுவார்கள். இது ரொம்ப ரொம்ப தவறு. மனைவி பக்கத்து நியாயத்தையும் கொஞ்சம் கேட்க வேண்டியது அவசியம் தானே.

உங்கள் வீட்டில் கணவரது ஆதிக்கம் மட்டும்தானா. நல்லது சொன்னால் கூட உங்களுடைய கணவரின் செவிகளில் விழாதா. இந்த மந்திரம் உங்களுக்காக மட்டும் தான். இது மனைவிகளுக்காக மட்டும் தான். தவிர, கணவன்மார்கள் சொல் பேச்சு கேட்காத மாணவிகளுக்கு இந்த மந்திரத்தை பயன்படுத்த முடியாது. எப்போதும் குடும்பத்தில் அடிதடி சண்டை சச்சரவு இருந்தாலும் மனைவிமார்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம். சண்டை போடும் கணவர் சமாதானமாக மாறிவிடுவார். சிடுசிடுவென இருக்கும் கணவர் கூட சிரித்து பேசுவார்.

- Advertisement -

சொல்பேச்சு கேட்காத கணவரை, வசியம் செய்ய மனைவி சொல்ல வேண்டிய மந்திரம்:
வசியம் என்றதுமே தப்பு கணக்கு போட்டுடாதீங்க. உங்களுடைய சுயநலத்திற்காக உங்களுடைய கணவரை கட்டுபடுத்த இந்த மந்திரத்தை பயன்படுத்தவே முடியாது. முழுக்க முழுக்க உங்களுடைய கணவரின் நன்மைக்காக மட்டும் தான் இந்த மந்திரம் பயன்படுத்தப்படும். தவறான எண்ணத்தோடு இந்த மந்திரத்தை உச்சரித்தாலோ அல்லது வேறு யாருக்காவது சொல்லிக் கொடுத்தாலோ மந்திரம் நல்ல பலனை கொடுக்காது.

சரி, அந்த மந்திரத்தை முதலில் தெரிந்து கொள்வோம். ‘ஓம் ஐம் நம’. காலையில் எழுந்தவுடன் திருமணமான பெண்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி விட வேண்டும். எழுந்தவுடன் 11 முறை உச்சரியுங்கள். பிறகு உங்களுடைய வேலை எல்லாம் பார்க்க தொடங்குங்கள். பிறகு எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க உங்களுடைய கணவர், உங்களுடைய பேச்சையும் கொஞ்சம் கேட்டு நடக்க தொடங்குவார். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த மந்திரம் உங்கள் வாயால் உச்சரிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு குடும்பத்தில் நன்மை நடக்கும். மொத்தமாக ஒரு மாதத்தில்1008 முறை இந்த மந்திரத்தை;உச்சரித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய கணவரின் நடவடிக்கையில் 25 சதவீதம் மாற்றத்தை பார்க்கலாம்.

- Advertisement -

சில கணவன்மார்களுக்கு மனைவியின் மீது அன்பு ஈடுபாடு இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட மனைவிமார்கள் கூட இந்த மந்திரத்தை உச்சரித்தால், உங்களுடைய கணவரின் அன்பை முழுமையாக பெற முடியும். ஆனால் நல்லா நினைவில் வச்சுக்கோங்க. முழுக்க முழுக்க நன்மைக்காக மட்டும் தான் இந்த மந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வறுமையை ஒட ஒட விரட்டி அடிக்க கூடிய இந்த தீபத்தை மாதம் ஒரு முறை வீட்டில் ஏற்றினாலே போதும். உங்கள் தலையெழுத்தையே மாற்றி செல்வந்தராக்க கூடிய வாய்ந்த தீபம்.

உங்களுடைய பேராசைக்காக சுயநலத்திற்காக கணவரை தவறாக பயன்படுத்துவதற்கு இந்த மந்திரத்தை ஒரு போதும் நம்மால் பயன்படுத்தவே முடியாது. நம்முடைய மனசாட்சிக்கு தெரியும் அல்லவா. நம்முடைய கணவர் எப்படி இருக்கிறார் என்பது அதற்கு தகுந்தபடி மந்திரத்தை உச்சரித்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -