வீட்டில் இந்த புகை போட்டால் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது கூட தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே!

sambrani-lakshmi
- Advertisement -

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்த புகையை வீடு முழுவதும் பரவ செய்தால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். நம் முன்னோர்கள் வழிவழியாக தொடர்ந்து இந்த நடைமுறை பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். ஆனால் இப்போது அதனையும் மாற்றி கம்ப்யூட்டர் வடிவமாக மாற்றி விட்டார்கள். ஆனால் இயற்கையாக இந்த புகையை போடும் பொழுது கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளம். வீட்டில் போட வேண்டிய அந்த புகை என்ன புகை? அதனால் கிடைக்கும் அதிர வைக்கும் நன்மைகள் என்ன? இந்த ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

sambrani

வெள்ளிக் கிழமையில் வீடு முழுவதும் என்னங்க போடுவோம்? சாம்பிராணி புகை தான். இந்த சாம்பிராணி இயற்கையாக நம் முன்னோர்கள் போடும் சாம்பிராணியாக இருப்பது நல்லது. ஆனால் இப்போது கம்ப்யூட்டர் வடிவத்தில் டிசைன் டிசைனாக வரும் சாம்பிராணியை போட்டு சுவாச பிரச்சினைகளை உண்டு பண்ணிக் கொள்கிறோம். கொட்டாங்குச்சியை எரித்து அதிலிருக்கும் வெப்ப தனலில் சாம்பிராணியை தூவி வீடு முழுவதும் புகையை எழுப்பி இறை வழிபாடு செய்து வந்தால் எத்தகைய தீய சக்திகளும் தலைதெறிக்க ஓடி விடும்.

- Advertisement -

எவ்வளவு துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், பகைவர்கள் தொல்லைகள் இருந்தாலும், குடும்ப பிரச்சனைகள் இருந்தாலும் வாராவாரம் இந்த சாம்பிராணி புகையை போட்டு வருவதன் மூலம் நிச்சயம் நீங்கும். ஆனால் அதனை பெரும்பாலும் என்று யாரும் கடைபிடிப்பது இல்லை. சாம்பிராணி புகை போடுவதால் நம் உடலில் மற்றும் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நிச்சயம் அகன்று விடும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும்.

சீரற்ற உடல் ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களிலும் நல்ல ஒரு மாற்றம் நிகழும். தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் இது போல சாம்ப்ராணி தூபம் போட்டு வந்தால் கண் திருஷ்டிகள் நீங்கி வருமானம் பன்மடங்கு பெருகும். தெய்வத்தினுடைய அருளைப் பெற நிச்சயம் இந்த சாம்பிராணி புகையை வீட்டில் போடுவது சிறந்த பரிகாரமாக இருக்கும். சாம்பிராணி புகையில் தெய்வத்தினுடைய அருள் உண்டு.

- Advertisement -

எத்தகைய ஜோதிட தோஷங்களும் நீங்க பெற வீட்டில் வாரம் ஒரு முறை சாம்பிராணி புகை போடுவது நல்லது. உங்களுக்கு வர வேண்டிய அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வந்தடையும். திடீர் அதிர்ஷ்டம், அதிர்ஷ்ட யோகம் போன்றவை சாம்பிராணி புகை போடுவதால் நமக்கு கிடைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? காரியத்தடை, சுபகாரிய தடை போன்ற தடைகள் விலகி நன்மைகள் பெருக வாரம் ஒரு முறை சாம்பிராணி புகையை வீட்டில் போட்டு பார்ப்பது நல்லது.

dhoopam

உங்கள் மீதும், உங்கள் வீட்டின் மீதும் இருக்கும் கண் திருஷ்டிகள், பொறாமைகள் நீங்கி பிரச்சனைகளை தவிர்க்கும். பிள்ளை பேறு உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய அந்த புகையை வாசிப்பதன் மூலம் புத்திர பாக்ய தடை நீங்கும். சாம்பிராணி புகையில் சிவகணங்கள் வசிப்பதாக ஐதீகம். சிவகணங்கள் உடைய பாதுகாப்பு கிடைக்க வீட்டில் சாம்பிராணி புகை அடிக்கடி போடுவது நல்லது. அதே போல பூதகணங்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளும் வீட்டிலிருந்து நீங்கிவிடும்.

thoopam

துஷ்ட ஆத்மாக்கள் நம் வீட்டில் இருந்தால் கூட, சாம்பிராணி புகை போடுவதன் மூலம் அவற்றால் நம் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி செய்து விடலாம். எதிர்ப்புகள், பகைகள், துரோகிகள், பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கிவிடும். தரித்திரம், பீடை, மூதேவி போன்றவை நம் வீட்டில் இருந்தாலும் அவைகள் ஓடிவிடும். பெரிய மகான்கள் உடைய ஆசிர்வாதம் கிடைக்கும். இன்பம், போகம் போன்ற பாக்கியங்கள் கிடைக்கும். இவ்வளவு நன்மைகளை கொடுக்கக்கூடிய சாம்பிராணி புகையை வாரம் ஒருமுறை ஏற்றுவதால் நாம் குறைந்துவிடப் போவதில்லை.

- Advertisement -