ஏழரை சனி, ஜென்ம சனி நாட்களில் வீட்டில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

rasi
- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஏதேனும் ஒருவருக்கு ஏழரைச் சனி நடக்கிறது என்றாலே குடும்பத்தில் பல கஷ்டங்களும், பிரச்சனைகளும் உண்டாகும். ஆதுவே குடும்பத்தில் இருக்கும் மூவரும் ஒரே ராசியாக இருந்தால் இவற்றைவிட மிகவும் மோசமான நிலைமையே உண்டாகும். இது போன்ற நேரங்களில் வரக்கூடிய சிறு பிரச்சனைகள் கூட பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். உடல் ஆரோக்கியமின்மை, கடன் பிரச்சனை, தொழிலில் நஷ்டம் இவ்வாறு அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அவ்வாறான நேரங்களில் சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் வரக்கூடிய பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். அவ்வாறான பரிகாரம் என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

rasi1

குடும்பத்தில் இருக்கும் நபர்கள் ஒரே ராசியாக இருந்தால் அவ்வளவுதான், எப்போதும் ஏக பொருத்தமாகத்தான் இருக்கும். இது போன்ற காரணத்திற்காக தான் திருமணத்திற்கு முன்பே ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் பெற்றோரையும் மீறி காதல் திருமணம் செய்து கொள்வதால் ஒரே ராசியினரிடையே திருமணம் நடைபெறும் சூழ்நிலை உண்டாகிறது. அதிலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால் குடும்பத்தில் மூவரும் ஏக ராசிக்காரர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

ஏழரை சனி, அஷ்டமசனி இதுபோன்ற மோசமான நேரங்களில் வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சமயத்தில் பாதிக்கப்படுவார்கள். இதனால் திடீர் விபத்துகளும், இழப்புகளும் ஏற்படும் நிலை உண்டாகும். இவ்வாறான இழப்புகளை தவிர்ப்பதற்காக சில கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று வந்தாலும், ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருந்தாலும் வரக்கூடிய பிரச்சனைகளை சிறிது தவிர்க்கலாம்.

sani-baghavan

ஒரே குடும்பத்தில் மூன்று பேரும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் வருடத்திற்கு ஒருமுறையாவது திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வழிபட்டு வந்தால் சிக்கலான நேரங்களில் வரும் பிரச்சனைகளில் இருந்து சற்று விடுபட முடியும்.

- Advertisement -

ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தார்கள் என்றால் கடலோர பகுதியில் இருக்கும் சம்ஹார ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தி வருவதன் மூலம் உங்களுக்கு வரும் பாதிப்புகளின் தாக்கத்தை சற்று குறைக்க முடியும்.

sea

ஒரே ராசிக்காரர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் நேரங்களில் ஒரே வீட்டில் வசித்தால் நிச்சயம் அவர்களுக்குள்ளே வாக்குவாதங்களும், சண்டைகளும் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இவற்றை தவிர்ப்பதற்காக பிள்ளைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம். அல்லது விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாம்.

- Advertisement -

fight

கணவன் மனைவியாக இருக்கும் பட்சத்தில், பணியில் இருப்பவர்கள் வேலை இடமாற்றம் செய்து, சிறிது காலங்கள் தனியாக இருந்து வந்தால் ஏற்படக்கூடிய சண்டை மற்றும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

family

ஒரே திசை நடக்கும் நேரங்களில் மூவரும் சேர்ந்து ஒரே இடத்திற்கு செல்வதையோ, ஒரே வண்டியில் பயணம் செய்வதையோ நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும். மூவரும் ஒரே இடத்தில் இருந்தால் அங்கு நிச்சயம் ஏதேனும் ஒரு பிரச்சனை உண்டாகும்.

vetrilai-malai-hanuman

இதுபோன்ற காலங்களில் வாரம் தோறும் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயர் மற்றும் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டு வருவதன் மூலம் உங்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

- Advertisement -