சாமி கும்பிடும் பொழுது உங்கள் வீட்டிற்கு இவர்கள் வந்தால் நீங்கள் விரைவில் பணக்காரர்களாக போகிறீர்கள் என்று அர்த்தமாம் தெரியுமா?

kuthu-vilakku-cash
- Advertisement -

காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி பூஜை செய்து வந்து தொடர்ந்து மந்திரங்கள் ஜெபிக்கும் இல்லங்களில் கோவிலைப் போன்றே ஒரு அமைதி இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு. அந்த வீட்டில் எந்த விதமான துர் சம்பவங்களும், துர் மரணங்களும் நிகழ்வதில்லை. எப்பொழுதும் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். இந்த பழக்கத்தை மாற்றி வருவதால் ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையவே பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அவ்வகையில் நாம் சாமி கும்பிடும் பொழுது இவர்கள் நம் வீட்டிற்கு வந்தால் விரைவிலேயே பணக்காரர்களாக கூடும் என்கிற பலன் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அப்படியான ஒரு விஷயத்தைப் பற்றிய அரிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இப்பொழுதும் பூஜை செய்து கொண்டிருப்பவர்களுக்கு சில சகுணங்கள் பொதுவாகவே தெய்வ சக்தியை நமக்கு உணர்த்தும். நாம் பயன்படுத்தாத பொருட்களின் வாசம் நாம் பூஜை செய்யும் பொழுது நமக்கு வீசினால் அவ்வாசம் நமக்கு இறை சக்தியை உணர்த்துவதாக அர்த்தமாகும். விபூதி வாசம் வீசுவது, சந்தன வாசம் வீசுவது. குங்குமம், கற்பூரம் போன்றவற்றின் வாசம் நீங்கள் அதை பயன்படுத்தாமலேயே உங்களுக்கு அதிகமாக வந்தால் அந்த இடத்தில் தெய்வ சக்தியை நீங்கள் உணர்கிறீர்கள்.

- Advertisement -

அது போல நீங்கள் சாமி கும்பிடும் பொழுது நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. நாம் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் வந்து உங்களுக்கு தர வேண்டிய பண தொகையை கொடுத்து விட்டு சென்றால், நீங்கள் விரைவிலேயே பணக்காரர்களாக மாறுவீர்கள் என்கிற பலனும் உண்டு.

சரியாக விளக்கு ஏற்றி விட்டு, பூஜை செய்யும் பொழுது, பூஜை மணி ஓசை கேட்கும் பொழுது, நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணத்தொகை அல்லது ஏதோ ஒரு செல்வம், பொருள், விலை உயர்ந்த விஷயங்கள் உங்களிடம் கொண்டு வந்து அவர்களாகவே கொடுத்து விட்டு செல்கிறார்கள் என்றால் நீங்கள் விரைவிலேயே உங்களுடைய தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள், உங்களுக்கு பண வரவு அதிகரிக்க போகிறது என்பதை உணர்த்துகிறது.

- Advertisement -

நிறை சாமி கும்பிடும் பொழுது செல்வம் அல்லது பணம் போன்றவற்றை லாபகரமாக உங்களுக்கு ஒருவர் கொடுத்து விட்டு சென்றால் உங்களுக்கு சுப பலன்கள் விரைவிலேயே கிட்டும் என்று கூறப்படுகிறது. சாமி கும்பிடும் பொழுது எப்பொழுதும் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு கும்பிட வேண்டும். பலவிதமான எண்ண ஓட்டங்கள், சிந்தனைகள் தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனை முழுமையாக உங்களுடைய கண்களில் நிறுத்தி, மனதார உங்களுடைய பிரச்சினைகளை முன் வைத்தால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்கள் விரைவிலேயே பலிக்கும்.

இவ்வுலகில் பலருடைய வேண்டுதல்கள் பலிக்காமல் போவதற்கு காரணம் இது தான். மனம் ஒருமுகப் படாமல் இறைவனை நினைக்காமல், ஏதோ கடமைக்கு என்று சிலர் கும்பிட்டு விட்டு போவார்கள். இதனால் ஒரு பலனும் உங்களுக்கு கிடைக்கப் போவது இல்லை! எனவே தினமும் ஒரு ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் ஆவது இறைவனுக்கு என்று உங்கள் நேரத்தை செலவிட்டு பாருங்கள், உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய் விடுவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -