உங்க முடி சொல்லும் வியப்பூட்டும் சாமுத்திரிகா லட்சணம் ரகசியம் என்ன தெரியுமா? பெண்களுக்கு எந்த மாதிரி முடி இருந்தால் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுவாங்க?

hair-astrology
- Advertisement -

பெண்களுக்கு முடி தான் முதல் அழகினை கொடுக்கிறது. கரு கருவென்று அலைபாயும் கருங்கூந்தல் உடைய பெண்களுக்கு இயல்பாகவே கூந்தலில் நறுமணம் இருக்குமாம். இப்படிப்பட்ட பெண்கள் தங்களுடைய முடியை ரொம்பவும் கவனமாக பராமரிக்க வேண்டும். உங்களுடைய முடியை வைத்து நீங்கள் எந்த மாதிரி வாழ்க்கையை அனுபவிப்பீங்க என்று சாமுத்திரிகா லட்சணம் ஜோதிடம் சொல்கிறது? வாங்க அதைப் பற்றி ஒரு சிறு அலசல் இப்பதிவில்!

நம்முடைய ஜாதகம் மட்டும் அல்லாமல் நம்முடைய அங்க லட்சணங்களை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள்? எப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவிப்போம்? என்பதை கூறுவதே சாமுத்திரிகா லட்சணம் ஆகும். ஒருவருடைய உடல் அமைப்பு, உடல் வாகு, ஒவ்வொரு அங்கங்களும் அமைந்திருக்கும் விதம் போன்றவற்றை வைத்து சாமுத்திரிகா லட்சணம் இவர்களை இப்படித் தான் இருப்பார்கள் என்று கணித்துக் கூறுகிறது.

- Advertisement -

சாமுத்திரிகா லட்சண படி ஒரு பெண்ணினுடைய கேசம் எப்படி இருக்கிறது? என்பதை வைத்து அவள் எப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க கூடும்? என்பதை கணித்து கூறுகிறது. அந்த வகையில் நம்முடைய தலைமுடி எப்படி இருக்கிறது? என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கூந்தல் அமைப்பு இருப்பது கிடையாது. ஒருவருக்கு இருக்கும் முடியின் தன்மை இன்னொருவருக்கு முற்றிலுமாக வேறுபட்டு இருக்கும் எனவே இந்த முடியை வைத்து நாம் சில ரகசியங்களை அறிவோம்.

ஒரு பெண்ணுடைய கூந்தல் நீண்டதாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும், நல்ல மணம் வீசும் படியாகவும் இருக்க வேண்டும். இத்தகையவர்கள் மகாலட்சுமியின் அருளை பெற்றவர்கள். இவர்களுடைய கைகளில் எப்பொழுதும் பணம் புழங்கி கொண்டு இருக்கும். இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கைராசிக்காரர்கள் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது.

- Advertisement -

‘கோரை குடியை கெடுக்கும், சுருட்டை சோறு போடும்’ என்கிற ஒரு பழமொழி உண்டு. கோரை முடி உள்ளவர்கள் குடும்பத்திற்கு அவ பெயரை வாங்கி கொடுப்பார்கள். தங்கள் இஷ்டப்படி வாழ்பவர்கள். கலப்பின திருமணத்தில் இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். தாய் தந்தையரை மனம் நோகும் படி இவர்கள் நடந்து கொள்வார்கள். ஆனால் சுருட்டை முடி கொண்டவர்கள் இதற்கு நேர் மாறானவர்கள். குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எல்லோரையும் அரவணைத்து, அனுசரித்து செல்வார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு சோறு போடும் அளவிற்கு திறமை வாய்ந்தவர்களாகவும், வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். சுருட்டை முடி உள்ளவர்கள் எப்பொழுதும் உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு, வெளியே ஒன்றை பேசமாட்டார்கள். உள்ளதை உள்ளபடி கொட்டி விடுவதால் இவர்கள் சில சமயங்களில் திமிர் பிடித்தவர்களாக தெரிவார்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த 5 ராசிக்காரர்களை குபேரருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். நீங்கள் மட்டும் தொடர்ந்து குபேர வழிபாடு செய்ய தொடங்கி விட்டால், பிறகு காசு பணம் உங்களுக்கு கொட்டிக் கொண்டே இருக்கும்.

தலைமுடி மென்மையாகவும், மிருதுவாகவும் கொண்டவர்கள் சாந்தமான குணம் கொண்டவர்கள். அதிகம் அலைந்து திரிந்து கஷ்டப்படாமல் வீட்டிலேயே இருந்து இவர்களுடைய வாழ்க்கை அமைதியாக செல்லும்படி அமையும். ஆனால் தலைமுடி மொர மொரவென்று கடுமையான தன்மையை கொண்டவர்கள் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எதுவும் சுலபமாக கிடைக்காது, போராடித்தான் பெற வேண்டி இருக்கும். இவர்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல், உழைத்து தான் அவர்கள் கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டிய சூழ்நிலை இருக்கும். இப்படி முடியை வைத்து ஒருவருடைய வாழ்க்கையை ரொம்ப சுலபமாக கணித்து கூறுகிறது சாமுத்திரிகா லட்சணம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எப்படிப்பட்ட முடியையும் நமக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ளக்கூடிய நவீன தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன இதனால் சாமுத்திரிகா லட்சணம் பின் தங்கியதாக இருக்கிறது.

- Advertisement -