இந்த 5 ராசிக்காரர்களை குபேரருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். நீங்கள் மட்டும் தொடர்ந்து குபேர வழிபாடு செய்ய தொடங்கி விட்டால், பிறகு காசு பணம் உங்களுக்கு கொட்டிக் கொண்டே இருக்கும்.

gubera
- Advertisement -

ஜோதிடத்தின் அடிப்படையில் குபேரருக்கு ரொம்பவும் பிடித்த ஐந்து ராசிகள் என்று ஒரு சின்ன பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 5 ராசிக்கு சொந்தக்காரர்களை குபேரருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். நம்முடைய இந்து சாஸ்திரப்படி குபேரர் தான் பணத்திற்கு அதிபதியாக சொல்லப்பட்டுள்ளார். குபேரரை வழிபாடு செய்தால் பணக்கஷ்டம் தீரும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அதிலும் இந்த குறிப்பிட்ட ஐந்து ராசிகள் குபேரரை வழிபட்டாலும், வழிபடவில்லை என்றாலும் அவர்களின் மீது குபேரருக்கு எப்போதும் ஒரு கண் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் இந்த ஐந்து ராசியில் ஒருவராக இருப்பீர்களா. குபேரனுக்கு பிடித்த அந்த ஐந்து ராசிகள் என்னென்ன. இந்த ஐந்து ராசிக்காரர்களும் குபேரரை தொடர்ந்து எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றியும் ஆன்மீகம் சொல்லும் அரிய தகவல்கள் இதோ உங்களுக்காக.

- Advertisement -

குபேரருக்கு பிடித்த ஐந்து ராசிகள்:
ரிஷபம், கடகம், விருச்சிகம், துலாம், தனுசு, இந்த ஐந்து ராசிகள் தான் குபேரருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப சொல்லுங்க, சரியான நேரத்தில் பணக்கஷ்டம் வரும் போது உங்களுக்கு குபேரர் உதவி செய்திருக்கிறாரா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் குபேரரை வழிபாடு செய்தாலும், வழிபாடு செய்யவில்லை என்றாலும் அவருடைய கடைக்கண் பார்வை எப்போதும் உங்கள் மீது இருக்கும். உங்களுக்கு பணம் கஷ்டம் என்று வந்தால் அதற்கு உதவி செய்ய ஏதாவது ஒரு ரூபத்தில் இவர் வந்து விடுவார். ஆனாலும் நீங்கள் குபேரரை என்றாவது ஒருநாள் வழிபாடு செய்ய மாட்டீர்களா, என்ற எதிர்பார்ப்பும் குபேரருக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

அதற்காக மற்ற ராசிக்காரர்களுக்கு எல்லாம் குபேரர் பணத்தைக் கொட்டி கொடுக்கவில்லையா. கொடுப்பார், எல்லோருக்கும் குபேரர் செல்வ வளங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், ஒரு ஸ்பெஷல் கரிசனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் இந்த ஐந்து ராசிகாரர்களில் ஒருவராக இருந்தால், வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று குபேரரை நினைத்து உங்களுடைய வீட்டில் ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள்.

குபேரரின் திரு உருவப்படம் அல்லது சிலை ஏதாவது இருந்தால் அந்த குபேரருக்கு முன்பாக இரண்டு கற்கண்டுகளை வைத்து ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை குங்குமம் வைத்து, நிவேதனம் செய்யுங்கள். பூஜையை முடித்துவிட்டு கற்கண்டுகளை பிரசாதமாக சாப்பிட வேண்டும். வியாழக்கிழமை தோறும் அந்த பச்சை குங்குமத்தை நெற்றியில் இட்டு வர குபேரரின் ஆசிர்வாதம் இன்னும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தீராத துன்பத்தை தரும் பிரம்மஹத்தி தோஷத்தால் தினம் தினம் துயரப்படுகிறீர்களா? அப்படியானால் உடனே இதை செய்து இந்த தோஷத்தில் இருந்து விரையில் விடுபட்டு நிம்மதியாக வாழுங்கள்.

இந்த ஐந்து ராசி கொண்டவர்கள் மட்டுமல்ல, மற்ற ராசிக்காரர்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். தவறு கிடையாது. மேல் சொன்ன தகவல்கள் எல்லாம் ஜோதிடத்தில் பொதுப்படையாக சொல்லப்பட்டவை. இது தவிர அவரவர் பிறந்த ஜாதகம், பிறந்த நேரம் என்ற ஒன்று இருக்கும் அல்லவா. அதற்கு ஏற்றது போல கர்ம வினைகளுக்கு ஏற்றது போல, சிலருடைய வாழ்க்கை இருக்கும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றும்போது வாழ்வில் நல்ல மாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -