உங்கள் குலதெய்வமும், இஷ்ட தெய்வமும், எப்போதும் உங்களுடனே இருந்து பாதுகாப்பது போல, உணர்வு கிடைக்கும். இதை நெற்றியில் இட்டுக்கொண்டால்!

thilagam
- Advertisement -

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள நம்முடைய உள்ளுணர்வும், மன உறுதியும், நம்பிக்கையும் தான் காரணமாக இருக்கும். நாம் வெளியில் செல்லும் போது நம்முடன் யாராவது ஒருவர் துணைக்கு வந்தால், அது நமக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். தினம்தோறும், அடுத்தவரை நம்பி நம்மால், வாழ முடியாது. நமக்கு நாமே தைரியத்தை வரவைத்து கொள்ள வேண்டு மென்றால், நம்முடன் தெய்வம் பாதுகாப்பாக இருக்கின்றது என்ற உணர்வைத்தான் கொண்டு வர வேண்டும்.

amman

பொதுவாகவே எல்லோரும் வீட்டிலிருந்து கிளம்பும்போது இறை வழிபாட்டை செய்து விட்டு, அதன் பின்பு தான் நம்முடைய வேலையை கவனிக்க செல்லுவோம். இருப்பினும் உங்களுடைய இஷ்ட தெய்வமாக இருந்தாலும் சரி, குலதெய்வமாக இருந்தாலும் சரி, அது உங்களுடனே இருப்பது போல உங்களுக்கு ஒரு உணர்வு ஏற்பட்டால் எப்படி இருக்கும்?

- Advertisement -

அது நமக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். மன தைரியத்தைக் கொடுக்கும் அல்லவா? மன தைரியத்தோடு செயல்படுபவர்கள், எல்லோருக்குமே நிச்சயம் வெற்றி உண்டு. கொஞ்சம் மன பயத்தால், தடுமாறினாலும் அது தோல்வியில் கொண்டு போய் முடித்து விடும். எந்த ஒரு விஷயத்திற்கும் இது பொருந்தும். இந்த பயத்தை போக்க பாதுகாப்பு உணர்வைக் கொண்டு வர, நாம் என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா? எல்லார் வீட்டிலேயும் கட்டாயம் குலதெய்வத்தின் திரு உருவப்படமும், அல்லது அவரவருடைய இஷ்ட தெய்வத்தின் திருவுருவப் படத்தையும் வைத்து கட்டாயம் வணங்குவோம்.

amman

கொஞ்சமா சந்தனத்தை எடுத்து, ஒரு கிண்ணத்தில் போட்டு பன்னீர் ஊற்றி நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய உருண்டைகளாக செய்து, உங்கள் குலதெய்வத்தின் நெற்றியில் அல்லது இஷ்ட தெய்வத்தின் நெற்றியிலும் இட்டுவிட வேண்டும். ஒரு நாள் முழுவதும் அந்த சந்தனமானது அந்த தெய்வத்தின் திருஉருவ படத்திலேயே இருக்கட்டும்.

- Advertisement -

மறுநாள் அந்த சந்தனம் நன்றாக காய்ந்து இருக்கும். அந்த சந்தனத்தை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு மீண்டும் தண்ணீர் ஊற்றியோ அல்லது பன்னீர் ஊற்றி குழைத்து தினம் தோறும் உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

muruga

தெய்வத்தின் நெற்றி, கால் பகுதி அவர்கள் பயன்படுத்தும் அஸ்திரம் இப்படி எல்லா இடங்களில் வைத்து விட்டும் கூட மொத்தமாக அந்த சந்தனத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளலாம். தவறில்லை, அதாவது உங்களுடைய குல தெய்வம் பெருமாள், முருகர், சிவபெருமான் இப்படி எதுவாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நெற்றிப் பகுதி, அவர்களுடைய கால்பகுதி, அவர்கள் பயன்படுத்தும் சங்கு, சக்கரம் அல்லது வேல், கம்பு எதில் வேண்டுமென்றாலும் நீங்கள் இந்த சந்தனத்தை இட்டுக் கொள்ளலாம். புரிகிறது அல்லவா? தெய்வத்தின் திரு உருவ படத்தில் வைத்த சந்தனத்தை எடுத்து, நாம் பயன்படுத்த போகின்றோம் அவ்வளவுதான்.

- Advertisement -

kungumam

நிச்சயம் அந்த தெய்வத்தின் சக்தியானது, அந்த சந்தனத்தின் உருவில் உங்களைப் பாதுகாக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். உங்கள் இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வழிபாட்டு முறைதான் இது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தெரியாமல் கூட யாரும் இந்த 10 தவறுகளை செய்து விடாதீர்கள்! உங்களை துன்பம் கண்டிப்பாக தேடி வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -