ஆடி வெள்ளிக்கிழமையில் இந்த வளையல் அணிந்தால் குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவையெல்லாம் நீங்கி பணம் கோடி கோடியாய் கொட்டுமாம்!

valayal-lakshmi
- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்ட சூழ்நிலை இருக்கும். மேலும் வருமான குறைவு, வியாபார விருத்தியின்மை, தொழில் நஷ்டம் என்று ஏதாவது ஒரு பிரச்சனையால் குடும்பம் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆடி வெள்ளிக்கிழமையில் பெண்கள் வீட்டில் இந்த வளையல் அணிந்து இவற்றை செய்தால் சாட்சாத் அந்த மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்கு வந்து குடியேறுவாள் என்பது நம்பிக்கை. அப்படியான ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

குடும்பம் என்றால் அதில் ஒற்றுமை இருக்க வேண்டும். ஒற்றுமை இல்லாத குடும்பத்தில் நிம்மதியும் இருக்காது. நிம்மதி இல்லாத குடும்பத்தில் பொருளாதாரமும் பின்தங்கி தான் இருக்கும். எனவே ஒரு குடும்பம் சுபீட்சமாக இருக்க முதலில் ஒற்றுமை தேவை. ஒற்றுமையை உண்டாக்கக்கூடிய அற்புதமான பரிகாரமாகவும் இப்பரிகாரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பரிகாரத்தை சாதாரணமாக அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் நீங்கள் துவங்கலாம். அதிலும் குறிப்பாக அம்மன் அருள் நிறைந்த இந்த ஆடி வெள்ளிக்கிழமைகளில் செய்வது ரொம்பவே விசேஷமானது.

- Advertisement -

பெண்கள் எப்பொழுதும் வீட்டில் வளையல் அணிந்து கொள்ளாமல் பூஜைகளை துவங்க கூடாது என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மையாகும். வளையல் அணிந்து கொள்ளாமல் செய்யப்படும் பூஜைகள் நிறைவுறாது. இப்படி அணியும் வளையல் ஆனது ரொம்பவே முக்கியமானது. எல்லா சாஸ்திர சடங்குகளுக்கும் வளையல் இன்றி அமையாததாக இருக்கிறது. வளைகாப்பு செய்தாலும் சரி, நலங்கு வைத்தாலும் சரி, திருமணம் போன்ற எல்லா விசேஷங்களிலும் பெண்கள் என்றால் கை நிறைய வளையலோடு இருப்பது தான் அவர்களுக்கு இறையருளை கூட்டும். இத்தகைய வளையல்களில் சங்கினால் செய்த வளையல் ரொம்பவே விசேஷமானது.

சங்கு ஆதிசேஷன் உடைய அம்சமாக விளங்குகிறது. சங்கில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். வலம்புரி சங்கு வீட்டில் வைத்து பூஜை செய்து வருபவர்களுக்கு வறுமை என்பதே ஏற்படாது மேலும் அத்தனை தோஷங்களையும் போக்கக்கூடிய இந்த அற்புதமான சங்கினால் செய்யப்பட்ட வளையல் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அணிவது அவர்களுக்கு மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற்றுக் கொடுக்கும்.

- Advertisement -

சங்கு வளையல்கள் கடலோர கடைகளிலும், சாதாரண பேன்சி ஸ்டோர்களில் கூட எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்றுதான். இந்த சங்கினால் ஆன வளையல்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும். உங்கள் கைகளில் சங்கு வளையல் இருக்கும் பொழுது, நீங்கள் உங்கள் கைகளால் ஒரு ரூபாய் தானம் செய்தாலும் அது பல கோடியாக பெருகும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் கணவர் அல்லது தந்தை என்று யார் வருமானம் செய்கிறாரோ அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய கைகளால் ஒரு ரூபாயை கொடுத்து வழி அனுப்ப வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கழுத்தை நெரிக்கும் கடன் சுமையும் காணாமல் போக கந்தக் கடவுளுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். கடன் சுமையானது கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் போய் விடும்.

காலையிலேயே வீட்டை எல்லாம் சுத்தம் செய்து பூஜையறையை சுத்தம் செய்து பூஜைகளை முடித்து விடவேண்டும். மகாலட்சுமியின் பாதத்திற்கு அடியில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விளக்கேற்றி பூஜை செய்த பின்பு அவர்களுக்கு ஒரு ரூபாயை எடுத்துக் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சங்கு வளையல் அணிந்து கொண்டு ஒரு ரூபாய் கொடுக்கும் பொழுது அது பல ரூபாயாக பெருக்கெடுத்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஒற்றுமையை அதிகரிக்க செய்து, பொருளாதார ரீதியாக உங்களை மேம்பட செய்யும் எளிய பரிகாரமாக அமையும்.

- Advertisement -