கழுத்தை நெரிக்கும் கடன் சுமையும் காணாமல் போக கந்தக் கடவுளுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். கடன் சுமையானது கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் போய் விடும்.

murugan dheepam
- Advertisement -

கடன் சுமை என்பது இன்ற அளவில் எல்லோருக்கும் இருக்கும் ஒன்று தான். அது அவரவர் நிலை ஏற்ப மாறு படும். அவர்களின் வருமானத்தை மீறிய கடன் சுமை அதிகரிக்கும் போது தான் கடனால் அவதிப்படுகிறார்கள். அப்படி கடன் சுமையில் சிக்கிக் கொண்டு நித்தம் நித்தம் அவதிப்படுபவர்கள் இந்த ஒரு எளிய தான பரிகாரத்தை இந்த வழிபாட்டுடன் செய்து வரும் பொழுது கடன் விரைவில் அடைவதற்கான வழிகள் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. அது குறித்த தகவல்களை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் சுமை தீர முருகர் வழிபாடு
முருகப்பெருமானை பெரும்பாலும் நாம் வீடு, நிலம் சொத்து குழந்தை பேரு ஆகியவற்றிற்காக வழிபாடு செய்து வருவதுண்டு. ஆனால் கடன் தீருவதற்கான வாய்ப்பை அருளக் கூடிய கடவுளாகவும் இந்த கந்த கடவுள் விளக்குகிறார். இந்த கந்தர் கடவுளை எப்படி வணங்குவது என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை நினைத்து வழிபடுவது சிறந்தது. திருப்பரங்குன்றம் செல்ல வாய்ப்புள்ளவர்கள் அங்கு சென்று இந்த வழிபாடை செய்யலாம். இங்கு செல்ல முடியாதவர்கள் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருஉருவப்படத்தை வீட்டில் வாங்கி வைத்து வணங்குகள். இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹேரையில் தான் செய்ய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 செவ்வாய் ஹேரையில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை நினைத்து உங்கள் வீட்டில் இரண்டு மண் அகலில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். முருகருக்கு செவ்வரளி பூவால் மாலை சூட்டி ஏதேனும் ஒரு எளிமையான நெய்வேத்தியத்தை படைத்து கந்த பெருமானை மனதார கடன் தீர வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அன்றைய தினத்திலே உங்களால் முடிந்த அளவிற்கு துவரம் பருப்பை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும் உங்களுக்கு சக்திக்கு ஏற்ப வாங்கி கொடுக்கலாம். இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்ற எந்த வரையரையும் கிடையாது. அதே போல் அன்று சமையலுக்கு துவரம் பருப்பை வைத்து சமைக்க வேண்டும்.

இந்த பரிகாரமானது மிக மிக எளிமையான ஒரு பரிகாரம் தான். ஆனால் இதை தொடர்ந்து செய்து வர உங்களுடைய பெரிய கடன் சுமை கூட குறைந்து விடும் அதிசயத்தை நீங்களே உணர முடியும். இந்த தீபத்தையும் தானத்தையும் செய்வதால் கடன் அடையுமா? என்றால் இது இரண்டும் உங்களின் கடன் அடைவதற்கான வாய்ப்பையும் அதற்கான வழிகளையும் காட்டும். அது மட்டும் இன்றி கடன் அடைய நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கைகூடும் இவையெல்லாம் இந்த தீபம் ஏற்றிய தொடங்கிய சிறிது நாட்களுக்குள்ளாக நீங்களே உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: ஆடி அமாவாசை தினமான இன்று எல்லோர் வாயில் இருந்தும் இந்த மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய பித்ரு சாபம் நீங்கி, முன்னோர்களின் ஆசி கிடைக்க 2 எழுத்து மந்திரம்.

தினம் தினம் கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் முருகப்பெருமானை மனதார நினைத்து நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து இந்த தானத்தையும் செய்து வாருங்கள் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -