சனி பெயர்ச்சி ஆனதில் இருந்து வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகளா? என்ன செய்வதென்றே புரியாமல் நிற்கிறீர்களா? சனிபகவானை சாந்தப்படுத்த சனிக்கிழமையில் இதை செய்யுங்கள் போதும்.

sani bagavan
- Advertisement -

வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கிரகமாக கருதப்படுபவர் சனீஸ்வரர். சனீஸ்வர பெயர்ச்சி ஏற்படும் பொழுது நம்முடைய வாழ்க்கையை திருப்பிப் போடும் அளவுக்கு பல மாற்றங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்தி, நம்மை சுற்றி இருப்பவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என பல பாடங்களை கற்றுக் கொடுப்பவர் சனீஸ்வரர். அப்படிப்பட்ட சனீஸ்வரரின் பாதிப்புகள் குறைய செய்ய வேண்டிய பரிகார முறையை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சனீஸ்வரர் பெயர்ச்சி ஆகும்பொழுது சில ராசியில் ஜென்ம சனியாகவும், அஷ்டம சனியாகவும், அஷ்டாத்தம சனியாகவும், ஏழரை சனியாகவும், பொங்கு சனியாகவும், மங்கு சனியாகவும் இருந்து நமக்கு பாதிப்புகளையும், தடங்கல்களையும் ஏற்படுத்துவார்.

- Advertisement -

வாழ்க்கையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி, நாம் முயற்சி செய்யும் பொழுது அனைத்திலும் தடங்கல்களை ஏற்படுத்தி, தொழிலில் முடக்கத்தை ஏற்படுத்தி, உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தி, வாழ்க்கையில் இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று கருதக் கூடிய அளவுக்கு நம் வாழ்க்கையை திருப்பிப் போட்டு நமக்கான வாழ்க்கை படத்தை கற்பித்துவிடுவார் அந்த நீதி மான். அப்படிப்பட்ட சூழலில் நாம் அவருக்கு செய்ய வேண்டிய பரிகாரம் தான் நல்லெண்ணெய் பரிகாரம்.

சனி பெயர்ச்சி பரிகாரம்:
பொதுவாக சனீஸ்வரருக்கு உகந்த தானியமாக கருதப்படுவது கருப்பு எள். இந்த கருப்பு எள்ளிலிருந்து பெறப்படுவது தான் நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணையை சனீஸ்வர பகவானுக்கும், மற்ற கிரகங்களுக்கும் சாற்றுவதன் மூலம் நம்முடைய பாதிப்புகளை குறைக்கலாம். அதாவது நல்லெண்ணையை வைத்து எண்ணெய் காப்பு செய்வதுதான் இந்த பரிகாரம்.

- Advertisement -

இந்த எண்ணெய் காப்பை தைலக்காப்பு என்றும் சொல்லுவர். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, மன கவலைக்கு உள்ளாகி, தொழிலில் தடங்கல்கள் ஏற்பட்டு இருப்பவர்கள் அவற்றில் இருந்து மேன்மை பெறவும், கடனில் இருந்து விலகி நல்ல மாற்றத்தை பெறவும் உதவும் பரிகாரமாக இது கருதப்படுகிறது.

இந்த பரிகாரத்திற்கு நாம் மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று நல்லெண்ணையை கோவிலுக்கு எடுத்துச் சென்று அர்ச்சகர் இடம் கொடுத்து நவகிரகங்களுக்கு எண்ணெய் காப்பு சாற்றுமாறு கூற வேண்டும். நம்மால் முடிந்தால் தினமும் எண்ணெய் காப்பு சாற்ற சொல்லலாம். அவ்வாறு இயலாத பட்சத்தில் சனிக்கிழமைகளில் மட்டுமாவது எண்ணெய் காப்பு சாற்ற சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனின் அருளால் 3 மாதத்தில் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து கையில் நிரந்தரமாக காசு தங்க 27 ஏலக்காய் போதும்.

இந்த எண்ணெய் காப்பால் நமக்கு அதி அற்புதமான பலன்கள் கிடைக்கும். மேலும் தோஷத்தில் இருந்து விடுபட்டு நம்முடைய வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தி கஷ்டங்கள் குறையும். இந்த எளிமையான பரிகாரத்தை மேற்கொண்டு சனிபகவானால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

- Advertisement -