சுக்கிரனின் அருளால் 3 மாதத்தில் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து கையில் நிரந்தரமாக காசு தங்க 27 ஏலக்காய் போதும்.

Sukran pariharam Tamil
- Advertisement -

கடன் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சினையாக இன்றைய காலத்தில் மாறிவிட்டது. எப்படியாவது கடனில் இருந்து விடுபட பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். இருப்பினும் இந்த கடன் சுமையிலிருந்து வெளிவருவது மிகவும் கடினமான செயலாகவே இருக்கிறது. இது போன்ற சூழல் இருந்து விடுபட்டு கடன் அடையவும், கைநிறைய பணம் சேரவும், அடமானம் வாய்த்த நகைகளை மீட்கவும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பார்ப்போம்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் பாதிக்கும் பொழுது தான் கடன் சம்மந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக நகை வீட்டில் தாங்காத ஒரு நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கு சுக்கிரன் மற்றும் குருவின் அருள் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் சுக்கிரன் மற்றும் குருவின் அருளை பெறுவதற்கான பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் முதலில் பச்சை நிற நூலை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நம் கடன் பிரச்சினைக்கு ஏற்றவாரோ அல்லது நம்மால் இயன்ற அளவிற்கு 27, 57, 108, 1008 என்ற எண்ணிக்கையில் ஏலக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஏலக்காய்களை நாம் மாலையாக கோர்க்க வேண்டும். மாலையாக கோர்ப்பதற்கு முன்பு ஏலக்காய்களை ஊற வைக்க கூடாது. அப்படியே தான் கோர்க்க வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் புதன், வியாழன் மற்றும் வெள்ளி போன்ற கிழமைகளில் செய்ய வேண்டும். அதுவும் சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும்.

சுக்கிர ஹோரை வருவதற்கு முன்பாகவே ஏலக்காய் மாலையை கோர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாலையை நாம் மாட்டுத் தொழுவம், துளசி மாடம், நம் வீட்டு பூஜை அறை, மொட்டை மாடி, ஆற்றங்கரை, தோட்டம் போன்ற இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்து கோர்க்க வேண்டும். அவ்வாறு கோர்ப்பதற்கு முன்பாக நாம் “குருவடி சரணம், திருவடி சரணம்” என்றோ அல்லது குருவின் ஏதாவது ஒரு மந்திரத்தை கூறி, பிறகு “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்று கூறிய பிறகு தான் ஏலக்காய் மாலையை கோர்க்க வேண்டும்.

- Advertisement -

மாலையை கோர்த்தபிறகு அருகில் இருக்கும் மகாலட்சுமி ஆலயத்திற்கு கொண்டு சென்று சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாருக்கு அணிவிக்க வேண்டும். ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு அணிவிக்கலாம். பிறகு மனதார நம்முடைய கடன் பிரச்சனையை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு வீட்டிற்கு வந்து அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு பால் பாயாசம், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் சிறிதளவு அட்சதை (மஞ்சள் கலந்த அரிசி) இவைகளை தானமாக தர வேண்டும். தானமாக தரும் நேரம் சுக்கிர ஹோரையாக இருக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் சுக்கிர பகவான் மகிழ்ச்சி அடைவார்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் திசையறியாமல் தவிக்கும் போது இந்த வழிபாட்டை செய்தால் போதும். மலை போல் முன் நின்ற பிரச்சினை கூட பனி போல உருகி விடும்.

இந்த பரிகாரத்தை நாம் கடன் பிரச்சனை தீரும் வரை செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்திற்கு உரிய பலன் மூன்று மாதத்திலேயே நமக்கு தெரிந்துவிடும். மேலும் சுக்கிரனின் அருளை எளிதாக பெறச் செய்யக்கூடிய தெய்வமாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன். இவர்களை சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்து நம்முடைய பிரச்சனைகளை மனதார வேண்டி வரும் பொழுது, நம்முடைய கடன் சுமை குறைந்து கையில் பணம் தங்க துவங்கும்.

- Advertisement -