சனி பகவானின் தாக்கம் குறைய தானம்

sani thaanam
- Advertisement -

சனிபகவான் என்றாலே எல்லோருக்கும் ஒருவித அச்சம் தோன்றத் தான் செய்யும். ஏனெனில் ஒருவருடைய ராசிக்குள் சனி பகவானின் தாக்கமானது ஆரம்பித்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் படாத பாடு படுவார்கள் என்பது அனைவரின் கருத்து. நம்முடைய நன்மை தீமைகளுக்கு ஏற்ற வகையில் பலன்களை இரட்டிப்பாய் தருவதில் சனீஸ்வரன் நீதிமான். ஆகையால் தான் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுகிறார்கள்.

அந்த வகையில் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் சனியின் பாதிப்பினால் துன்பப்படுபவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகார முறையை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தானத்தை செய்வதோடு சனி பகவானின் தாக்கம் நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

சனி பகவானின் பாதிப்பு குறைய

சனிபகவானின் தாக்கம் குறைய தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தானம் என்றால் யாருக்கு வேண்டுமானாலும் செய்வது கிடையாது. இந்த தானத்தை ஊனமுற்றவர்களுக்கு செய்ய வேண்டும். அதாவது இரண்டு கண்கள் இரண்டு கால்கள் இரண்டு கைகள் இல்லாத யாரேனும் ஒருவருக்கு செய்ய வேண்டும். ஏனெனில் இவர்கள் எல்லாம் சனியின் காரணத்துவமாக பார்க்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு நல்ல தரமான துணிகளை தானமாக தர வேண்டும். ஆண்களாக இருந்தால் வேஷ்டி சட்டை துண்டு பெண்களாக இருந்தால் புடவை ரவிக்கையை தர வேண்டும். இத்துடன் வடை பாயசத்துடன் தரமான உணவை தண்ணீர் பாட்டிலுடன் வாங்கித் தர வேண்டும். மேலும் மாதுளை பழம், மற்றும் 1001/- ரூபாய் பணத்தையும் தானமாக தர வேண்டும்.

- Advertisement -

இந்த தானத்தை சனிக்கிழமைகளில் தருவது மிகவும் சிறந்தது மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பணத்தை 3 வாரமும் தர முடியாதவர்கள் ஒரு வாரம் மட்டும் தந்தால் கூட போதும். ஆனால் துணிகளையும் உடைகளையும் நிச்சயம் தானமாக தர வேண்டும். இவர்களுக்கு எள் சாதத்தையும் தானமாக தரலாம்.

இத்துடன் காக்கைக்கும் தினமும் சாதம் வைத்து வாருங்கள். சனியினுடைய தாக்கம் பெரும் அளவில் உங்களுக்கு குறையும். இது மட்டும் இன்றி சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடு செய்வது மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அப்படி நவகிரகத்தை சுற்றி வரும் போது அதற்கான ஸ்லோகங்களை உச்சரிப்பது மிகவும் நல்ல பலனை தருவதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்

சனி பகவானின் தாக்கம் குறைய சனியின் காரணத்துவமான இவர்களுக்கு செய்யும் இந்த தானமே சிறந்தது. இதனால் சனி பகவானை நம்மை எந்த பாதிப்பும் வராமல் காத்து விடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த தான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

- Advertisement -