தடைகள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்

narachimmar manthiram
- Advertisement -

மனிதனாக பிறப்பவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் ஜெயித்து முன்னுக்கு வர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதற்காக பலவகையான முயற்சிகளையும் செயல்களையும் செய்வார்கள். இவை அனைத்திலும் வெற்றி அடையவில்லை என்றாலும் ஏதாவது ஒன்றிலாவது வெற்றி அடைந்தால் தானே நம்முடைய முயற்சிக்கான பலன் கிடைக்கும்.

ஒரு சிலரின் வாழ்க்கையில் இந்த வெற்றி என்ற வார்த்தைக்கு வாய்ப்பே இருக்காது. எந்த செயலை தொடங்கினாலும் அது தோல்வியில் தான் முடியும். அவர்களுக்கென்ன ஒருவர் உதவி செய்ய நினைத்தால் கூட அவர்களாலும் செய்ய முடியாது இப்படி அனைத்திலும் தடைகளையே சந்தித்துக் கொண்டு முன்னேறாமல் இருப்பார்கள்.

- Advertisement -

ஒருவருடைய இத்தகைய நிலைமைக்கு கிரக சூழ்நிலைகள் கர்மா என பல காரணங்கள் இருக்கக் கூடும். ஆனால் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதும் இருக்க வேண்டும் அல்லவா. இப்படியான சூழ்நிலைகளால் ஒருவர் முன்னேற முடியாமல் தடைகளாக இருக்கும் பட்சத்தில் நரசிம்மரின் இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது .அது என்ன மந்திரம் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தடைகள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த மந்திர வழிபாட்டை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் இந்த வழிபாட்டிற்கு லட்சுமி நரசிம்மரின் புகைப்படம் இருந்தால் நல்லது. லட்சுமி நரசிம்மரின் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடும் போது தடைகள் நீங்குவதோடு வீட்டில் செல்வ செழிக்கும் அதிகரிக்கும். இந்தப் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நரசிம்மருக்கு பிடித்த செவ்வரளி பூக்களால் மாலை தொடுத்து போடுங்கள். அத்துடன் ஒரு தீபம் ஏற்றி வைத்து இதை சொல்லுங்கள்.

- Advertisement -

நரசிம்மர் மூல மந்திரம்

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,
ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,
பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

என்ற நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து துளசிஇலையால் அர்ச்சனை, நிற செய்து வணங்கி வந்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் பெற்று காரிய தடைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: புத்தாண்டில் ஏற்ற வேண்டிய தீபம்

இந்த மந்திரத்தை படிக்க முடியாதவர்கள் யூடூப்பியில் ஒலிக்க விட்டும் கேட்டலாம். உங்களின் அயராத முயற்சியுடன் நரசிம்மரின் இந்த மந்திரத்தையும் சொல்லி வழிபடும் போது தோல்வியே உங்களை கண்டு தூர விடும். நம்பிக்கையுடன் வழிபட்டு வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்.

- Advertisement -