சனியின் அமர்வால் இந்த ராசிக்காரர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

sani peryarachi
- Advertisement -

பொதுவாக சூரிய கிரகணத்தையொட்டி சனி பகவான் இடம்பெயர்வது உண்டு. அந்த வகையில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடந்த சூரிய கிரகத்தையொட்டி சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைந்திருக்கிறார். பொதுவாக சனி பகவான் இடபெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் பாதகங்களும் சாதகங்களும் இருக்கும். இந்த பெயர்ச்சியானது சில ஜாதகக்காரர்களுக்கு படு மோசமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. அதைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களிலே இந்த சனி பகவான் நீதிமானாக பார்க்கப்படுகிறார். ஆகையால் தான் சனி பகவான் என்றதுமே எல்லோருக்கும் ஒருவித அச்சம் தோன்றுகிறது. இவர் சஞ்சரிக்கும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளுக்குள் அந்த ராசிக்காரர்களுக்கும் அதன் அருகில் இருக்கும் ராசிக்காரர்களுக்கும் நன்மை தீமை என பல்வேறு பலன்களை தருவார்.

- Advertisement -

சனிபகவான் தற்போது தனது ஆட்சி வீடான கும்பத்தில் வக்கிர நிலையில் இருக்கிறார். அதுவும் அக்டோபர் 14 சூரிய கிரகணத்திற்கு பிறகு இதன் பலம் இன்னும் அதிகமாக கூடியிருக்கிறது. இதனால் 12 ராசிகளில் மூன்று ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த மாதம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சனியின் அமர்வால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

கன்னி ராசி
இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் இடபெயற்ச்சியால் விரைய செலவுகளும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். இதனால் தேவை இல்லாத மன அழுத்தங்கள் வரக் கூடிய காலக்கட்டம் இது. வேலை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணம் தொடர்பான விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மேலும் நன்மையும் தரும். காதல் கலையில் வல்லவரான இந்த ராசிக்காரர்கள் வரும் 15 நாட்களுக்கு அனைத்து விஷயத்திலும் அமைதியாக இருப்பது நல்லது.

- Advertisement -

விருச்சகம்
சனியின் இந்த பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு மிகவும் கெடுபாலனை கொடுக்கிறது பணியிடங்களில் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் முடிந்த வரையில் அனைத்திலும் இருந்து விலகி வர பாருங்கள். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. ஏனெனில் உடல் நிலை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. வண்டி வாகனங்களில் செல்லும் போதும் கவனமாக செல்ல வேண்டிய காலம் இது.

மீனம்
சனியின் இந்த இடமாற்றமும் சூரிய கிரகணத்தின் காரணமாக மீன ராசியினருக்கு இன்னும் கூடுதல் கெடு பலன்கள் தர இருக்கிறது. ஆகையால் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை கட்டுக்குள் வைத்திடுங்கள். கூட்டுத் தொழில் செய்தால் நிச்சயம் நஷ்டம் ஏற்படும். தேவையில்லாத மனச்சுமை பணச்சுமை அனைத்தும் ஏற்படக் கூடிய காலம் இது. ஆகையால்
முடிந்த வரையில் மனதை அமைதியாக வைத்திருக்க யோகா போன்றவற்றில் ஈடுபட முயற்சி செய்வது நல்லது.

இதையும் படிக்கலாமே: பிறக்கும் போதே அறிவாளிகளாக பிறக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்.

ஜோதிடம் குறித்த இந்த பதிவில் சூரிய கிரகணத்தினையொட்டி சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிட சாஸ்திரத்தின்படி உள்ள பொதுவான கருத்தாகும். இதில் அவர்களுடைய கிரக நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களும் இருக்கும் என்பதை தெரிவிப்பதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -