கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் நீங்க உப்பும், மிளகும் செய்யும் அற்புதங்கள் என்ன? இத மட்டும் செஞ்சா இனி சண்டையே வராது.

salt-pepper-fight
- Advertisement -

கணவன், மனைவிக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை, சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் சந்தேகம் மட்டும் இருக்கவே கூடாது என்று கூறுவர். சந்தேகம் மற்றவர்களை மட்டுமல்ல, அவனையும் சேர்த்து அழித்து விடும். கணவன், மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் அளவற்ற நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும். நம்பிக்கையில் தான் அந்த உறவு மேலும் பலப்படும். இப்படி அல்லாமல் அடிக்கடி சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் போன்ற பிரச்சனையில் இருக்கும் கணவன் அல்லது மனைவி செய்ய வேண்டிய அற்புத எளிய பரிகாரம் தான் இது. அதை எப்படி செய்ய வேண்டும்? என்கிற ரகசிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

fight2

கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு, மிளகு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்பு மற்றும் மிளகிற்கு நிச்சயம் உண்டு. ஒருவரை வசியம் செய்யவும், அவரை நம் வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் உப்பு, மிளகு பெரும்பாலும் தாந்திரீகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

இத்தகைய உப்பும், மிளகும் கணவன், மனைவி பிரச்சனையை எப்படி தடுக்கும்? அதன் சூட்சம குறிப்புகள் என்ன? என்பதைத் தான் இனி வரும் பத்திகளில் காண இருக்கிறோம். கணவன், மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு ஒருவரை ஒருவர் முதலில் அமைதியான நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று இவ்வுலகில் எதுவுமில்லை. பேசினாலே சண்டை தாங்க வருது! அதனால் பேசி பிரயோஜனம் இல்லை என்று கூறக்கூடாது.

fight

சண்டையை தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் மனோதிடமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியும் தீர்க்கவே முடியாத பிரச்சனையும், சந்தேகம் என்னும் கொடிய நோயையும் ஓட ஓட விரட்ட செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நாள், நட்சத்திரம், நேரம், காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது.

- Advertisement -

உங்களால் முடிந்த நேரத்தில் நீங்கள் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். குண்டு குண்டாக இருக்கும் 27 மிளகுகள் மற்றும் இருபத்தி ஏழு கல் உப்புகளை எண்ணி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து கொண்டே அந்த கண்ணாடி டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரில் முதலில் ஒவ்வொரு கல் உப்பையும் எடுத்து போட்டு கொண்டே வர வேண்டும்.

salt-with-pepper

மந்திரம்:
ஓம் மோகினி தேவிம் இஜ்ரேஷ்வரீம் காம் மாலினிம் ம ம் ப்ரியதம் அகர்ஷனா கர்ஷன நமோ நமஹ!

couple

பின்னர் இதே முறையில் இதே மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே மிளகுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து போட்டுக் கொண்டே வர வேண்டும். இப்படி எல்லா மிளகு மற்றும் கல் உப்புகளையும் போட்டு முடித்த பின்பு நீங்கள் மனதார உங்கள் பிரச்சனையை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். என்னுடைய கணவன் அல்லது மனைவி என் மேல் மீண்டும் பழைய அன்புடன் அதே போல இருக்க வேண்டும். எல்லோரையும் போல நாங்களும் ஒருமித்த தம்பதிகளாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்ட பின் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அப்படியே ஓடும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். நீர் நிலைகள் இல்லாத பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் சிங்கிள் கொட்டி விடலாம். அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்த கொஞ்ச நாட்களிலேயே உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும்.

- Advertisement -