ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் இந்த கோவிலுக்கு போனாலே பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

sarabeshwarar
- Advertisement -

இன்று முக்கால்வாசி மனிதர்களுக்கு இந்த பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. கடன் வாங்கி விட்டோம். அதை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடனாக பணத்தை கொடுத்தோம். அதை வசூல் செய்ய முடியவில்லை. பணத்தை சேமிக்க முடியவில்லை. வீண் விரைய செலவுகள் என்று பணம் மூலம் வரக்கூடிய சிக்கல்கள் ஏராளம்.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்கள் இந்த கோவிலை தேடி கண்டுபிடித்து சென்று தான் பாருங்களேன். உங்களுக்கு வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்று.

- Advertisement -

கடன் தீர ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரர் வழிபாடு

உங்கள் வீட்டு பக்கத்தில் சரபேஸ்வரர் சன்னிதானம் இருக்கக்கூடிய ஆலயம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள். இந்த சரபேஸ்வரர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த பூஜையில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

உங்களுக்கு முடிந்த பிரசாதத்தை நிவேதியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம். இந்த கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் விளக்கு போட்டு உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனையை சரபேஸ்வரரின் பாதங்களில் இறக்கி வைத்து வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய பணக்கஷ்டமாக இருந்தாலும் படிப்படியாக குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பணப்பிரச்சனை தானாக சரியாகும். இதோடு மட்டுமல்லாமல் இன்னொரு தாந்திரீக ரீதியான பரிகாரத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். சிறிய அளவில் பனை ஓலை எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த பண ஓலையை எரிக்க வேண்டும்.

எப்போது தெரியுமா? அந்தி நேரம் என்று சொல்லுவார்கள், மாலை நேரம் முடிந்து, இரவு நேரம் தொடங்கும் அந்த இடைப்பட்ட காலத்தில் இந்த பனை ஓலையை எரித்தாலும் பணப்பிரச்சினை தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப்பொழுது என்று சொல்லுவார்களே மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இழந்ததை அனைத்தையும் திரும்ப பெற்று உங்கள் தலையெழுத்தையே மாற்றக் கூடிய ஸ்தலம்.

இதை ஞாயிற்றுக்கிழமை தான் எரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எந்த நாளில் வேண்டுமென்றாலும் இந்த பனை ஓலையை எரிப்பதன் மூலம் உங்கள் பண கஷ்டம் தீரும். மேலே சொன்ன எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் தாந்த்ரீகம் சார்ந்த பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன்.

- Advertisement -