வாழ்க்கையில் இழந்ததை அனைத்தையும் திரும்ப பெற்று உங்கள் தலையெழுத்தையே மாற்றக் கூடிய ஸ்தலம்.

sundhareshwarar bhutha bhagavan
- Advertisement -

இழப்பு என்ற ஒரு விஷயத்தை ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சந்தித்திருப்போம். அதுவும் ஒரு சிலர் வாழ்க்கையில் சொல்லவே முடியாதபடி எடுத்த காரியங்கள் எதிலும் வெற்றி பெற முடியாது. வாழ்க்கையில் நிம்மதி இழந்து ஏன் பிறந்ததோம் என்கிற நிலைமையில் இருப்பார்கள். அப்படியானவர்கள் தஞ்சம் அடையக் கூடிய ஒரு அருமையான வழிபாட்டு ஸ்தலத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த ஸ்தலத்தில் சென்று வழிபாடு செய்யும் பொழுது மனித உயிர் இழப்பை தவிர மற்ற அனைத்தும் திரும்ப பெறக்கூடிய யோகத்தை பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஸ்தலமானது சீர்காழி அருகில் உள்ள திருவெண்காடு என்கிற ஊரில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் ஆலயம் தான். இந்த ஆலய வழிபாட்டை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த ஆலயத்தின் பெருமையையே பிரம்மன் பிரணவ மந்திரத்தை மறந்தால் முருக பெருமானார் பிரம்மாவை சிறையில் அடைத்த இடம் இந்த ஸ்தலம். பிரம்மன் சிவபெருமானையை நினைத்து மூச்சை அடக்கி தவம் இருந்து வரம் பெற்ற ஸ்தலமும் இது தான் . பிரம்மனே தான் இழந்த அனைத்தையும் திரும்ப பெற வழிபட்டாதால், இந்த ஸ்தலத்திற்கு சென்று வழிபடும் போது நாம் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இழந்ததை மீண்டும் பெற

இந்த ஸ்தலத்திற்கு புதன்கிழமை செல்ல வேண்டும் அல்லது சனிக்கிழமை சென்று இரவு தங்கி ஞாயிறு அன்று இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அங்கு சென்றவுடன் முதலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்களின் நீராட வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு அங்கு சிவபெருமானின் ருத்ரபாதம் உள்ளது. அதை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து தீபம் ஏற்றி தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். பின்பு அங்கு சுவாதிஸ்வரர், ஸ்வாதி லிங்கம், அகோர மூர்த்தி, பிரம்மவித்யாநாயகி, பிரம்ம ஜீவசமாதி, புதபகவான் என அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக வணங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த பூஜையில் கலந்து கொண்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை இந்த ஆலயத்திற்கு சென்று இப்படி வழிபாடு செய்து வந்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் தீராத பிரச்சனைகள் தீர்ந்து போகும். இழந்த அனைத்தும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். மொத்தத்தில் உங்களுடைய தலையெழுத்தே மாறி வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் இந்த ஆலயம் சென்று பலன் அடையுங்கள்.

- Advertisement -