சோதனையை வென்று, வாழ்வில் சாதனையை படைக்க இந்த 1 பொருள் போதும். 5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை, 1 வருடத்தில் சாதித்து காட்டுவீர்கள்.

durgai
- Advertisement -

சோதனையை வென்றால் தான் சாதனை என்று சொல்லுவார்கள். வாழ்வில் அடுத்தடுத்த சோதனையை தாங்கிக் கொண்டு கஷ்டப்படுபவர்களுக்கு உண்டான ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேருடைய முன்னேற்றம் குறுகிய காலத்தில் இருக்கும். அதாவது ஐந்து வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஒரே வருடத்தில் சாதித்து முடித்து விடுவார்கள். சில பேருடைய முன்னேற்றம் கொஞ்சம் தாமதமாக இருக்கும். ஒரு வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஐந்து வருடமானாலும் சாதிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம். நம்மை சுற்றி இருக்கும் கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும் தான் ஏதோ ஒரு விதத்தில் நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்றது. இதை சரி செய்ய எளிமையான ஒரு பரிகாதத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த பதிவின் மூலம் இரண்டு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு எது எளிமையாக உள்ளதோ, அதில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்யலாம். முடிந்தவர்கள் இரண்டு பரிகாரத்தையும் செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

விரைவில் சாதனை படைக்க பரிகாரம்:
முதலில் கண் திருஷ்டியை போக்குவதற்கு எளிமையான ஒரு பரிகாரத்தை பார்க்கப் போகின்றோம். இதற்கு நமக்கு தேவை மை. கண்ணுக்கு தீட்டிக்கொள்ளும் மை. கடைகளில் சுலபமாக கிடைக்கும் அல்லவா. அதை ஒரு டப்பா வாங்கி வீட்டிற்குள் வைத்து விடுங்கள். பூஜையறையில் வைத்து குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள்.

தினமும் ஆண்கள் வெளியில் செல்லும்போது இந்த மையை லேசாக எடுத்து கண்ணின் இடது புருவத்தில் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் தெரியும் படி கூட வைக்க வேண்டாம். கருப்பு நிற மையை, கருப்பு நிற புருவத்தில் பூசும்போது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஒரு சொட்டு எடுத்து தடவிக் கொண்டு வெளியில் சென்றால் கண் திருஷ்டியால் வரும் தடைகள் விலகும்.

- Advertisement -

நீங்கள் பெண்களாக இருந்தால் உங்களுடைய இடது கால், கட்டைவிரல் நுனியில் தடவிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இடது உள்ளங்காலில் கொஞ்சமாக இந்த கருப்பு மையை தடவிக் கொண்டு வெளியில் சென்றால் உங்களுடைய முன்னேற்றம் கண் திருஷ்டியால் பாதிக்கப்படாது.

குழந்தைகள் வெளியில் செல்லும்போது இந்த கண்மையை உச்சம் தலையில் தடவி விட்டு விடுங்கள். எந்த ஒரு கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் அவர்களை தாக்காமல் இருக்கும். தினமும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுடைய முன்னேற்றத்தில் வரக்கூடிய தடைகள் எல்லாம் சரியாகிவிடும். எதைத் தொட்டாலும் தோல்வி என்ற பிரச்சனை இருக்கும் அல்லவா. அதில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். நீங்கள் வெற்றி பெற்றால் உங்களைப் பார்த்து நிச்சயம் உங்களை சுற்றி இருக்கும் நான்கு பேருக்கு ஒரு சின்ன பொறாமை குணம் இருக்கும். இவனைப் போல நம்மால் வாழ முடியவில்லை என்று அந்த ஏக்கம் உங்களை தாக்காமல் ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் நீங்கள் இருப்பீர்கள்.

- Advertisement -

முன்னேற்றம் தடைபடுவதற்கு காரணம் கிரகங்களின் பிரச்சனைகளாக கூட இருக்கலாம். உங்களுக்கு கெட்ட நேரம் நடக்கும் போது நீங்கள் எந்த முயற்சியும் மேற்கொண்டாலும் அதில் வெற்றி காண முடியாது. அடுத்தடுத்த தோல்வி வரும்போது, சாதனை கொஞ்சம் தள்ளித்தான் செல்லும். இந்த சோதனைகளை வெல்ல ஆன்மீகத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு சிறப்பான வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் போய் துர்கை அம்மனை பார்த்து வழிபாடு செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: மார்ச்சில் பெயர்ச்சியாகும் செவ்வாய் கிரகம்! ராஜயோகம் பெறவிருக்கும் 3 ராசிகள் என்னென்ன?

துர்கை அம்மன் வழிபாடு செய்யும்போது முட்டிப்போட்டு மண்டியிட்டு உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை கேட்டால் அந்த தீர்வு உடனே கிடைத்துவிடும். உங்களுடைய வாழ்க்கையில் தடைகள் என்பது இருக்காது. நேரமே சரியில்லை என்றாலும், சரியில்லாத நேரத்தை சரி செய்யும் சக்தி துர்கை அம்மன் வழிபாட்டிற்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -