சனிக்கிழமை பசுமாட்டிற்கு 1 கட்டு இந்த பொருளை வாங்கிக் கொடுத்தால், பணம் சேராதவர் கையில் கூட கட்டுக்கட்டாக பணம் சேரும்.

cow
- Advertisement -

சில பேர் என்ன தான் பணத்தை இழுத்து பிடித்து சேமித்து வைத்தாலும், அவர்களுடைய கையில் பணம் தங்கவே தங்காது. தண்ணீர் போல பணம் கரையும். சேமிப்பு கரையும். இப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக வீண் விரயம் குறைந்து சேமிப்பு பெருகும். இன்னும் ஒரு சில பேருக்கு நல்ல வேலையே கிடைக்காது. கையில் வருமானமே இருக்காது. பிறகு எப்படி சேமிப்பது. நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் கைநிறைய பணம் புரள வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் முழுமனதுடன் நம்பிக்கையோடு இந்த ஒரு பொருளை குறிப்பிட்ட இந்த நேரத்திற்குள் பசுமாட்டிற்கு வாங்கி கொடுத்தால் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

பொதுவாகவே மகாலட்சுமி வழிபாடு என்றால் அது வெள்ளிக்கிழமை தானே உகந்தது என்று நாம் சொல்வோம். ஆனால் சனிக்கிழமை அன்றும் பெருமாள் கோவிலுக்கு சென்று மகாலட்சுமியை வழிபாடு செய்வது மிகமிக சிறப்பான வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது. சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்துவிட்டு அதன் பின்பு தாயாரையும் வழிபாடு செய்து விடவேண்டும். முடிந்தவரை சனிக்கிழமை காலை 6.00 மணிக்கே பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த மகாலட்சுமி வழிபாட்டை செய்யுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமி வழிபாடு என்றால் பெரிய சிரமம் கிடையாது. தாயாருக்கு வாசனை மிகுந்த பூக்களை வாங்கி கொடுத்துவிட்டு, மகாலட்சுமி சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து மனதார உங்களுடைய பணப்பிரச்சனை தீர, வருமானம் அதிகரிக்க வேண்டுதலை வைத்துவிட்டு, அதன் பின்பு வீடு திரும்புவீர்கள் அல்லவா, அப்போது பசு மாட்டிற்கு ஒரு கட்டு அகத்திக் கீரையை உங்கள் கையால் வாங்கி கொடுப்பது மிகவும் சிறப்பு.

அப்படி இல்லை என்றால் மதியம் 12 மணிக்குள் இந்த அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கீரை கட்டு கொடுத்தால் போதும். வசதி வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது செல்வச்செழிப்பு மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பவர்கள் உங்களால் முடிந்த எத்தனை கட்டு அகத்திக்கீரையை வேண்டுமென்றாலும் சனிக்கிழமை 12 மணிக்கு முன்பாக பசுமாட்டிற்கு வாங்கி கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரே ஒரு வாரம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்துவிட்டு கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. வாழ்நாள் முழுவதும் இதை தொடர்ந்து செய்து வாருங்கள். சனிக்கிழமை கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தால் கூட, பரவாயில்லை. பசுமாட்டிற்கு ஒரு கட்டு அகத்திக் கீரையை வாங்கி கொடுத்துவிட்டு உங்களுடைய வேலையை பாருங்கள்.

உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். லாபம் மேலும் மேலும் பெருகும். கையில் வருமானம் அதிகரிப்பு, சேமிப்பு இரட்டிப்பாகும். முடிந்தவரை லட்சுமிதேவி உங்களுக்கு கொடுத்த பணத்தை நாலு நல்ல தர்ம விஷயங்களுக்கு செலவு செய்யும் போது இன்னும் செல்வச் செழிப்பில் பலமடங்கு உயர்வீர்கள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு மேல் சொன்ன பரிகாரங்களை பின்பற்றிக் பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -