நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

kungumam
- Advertisement -

திருமணம் ஆன சுமங்களி பெண்கள் தங்கள் நெற்றியில் குங்கும திலகம் இட்டுக்கொள்வது வழக்கம். குங்குமமானது இயற்கையான பல்வேறு மூலிகைகளான கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், படிகாரம் இப்படி இன்னும் சில பொருட்களை கொண்டு அரைக்கப்பட்ட அதோடு நல்லெண்ணையை கலவையாக கலந்து தயாரிக்கப்படுகிறது. இப்படியான கலவையில் ஏற்படும் வேதியல் மாற்றத்தால் குங்குமம் சிவப்பாக இருக்கிறது.

kungumam

அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது. மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.

- Advertisement -

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளைத் தோற்றுவிக்கும். இதை அணிந்த எவரையும் வயப்படுத்துவது கடினம்.

தெய்வத்தன்மையும் மருத்துவத் தன்மையும் உள்ள குங்குமத்தை அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

kungumam

மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

குங்குமம் இட்டுக்கொள்வதால் பெண்களுக்கு உடல் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்வதால் அவர்களுடைய சிந்தனை திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. அதோட அவர்கள் எப்போது புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் உதவுகிறது.

- Advertisement -

நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இந்த நெற்றி பொட்டு தான். யோகக் கலையில் இதனை ‘ஆக்ஞா சக்கரம்’ என்று கூறுகின்றார்கள். இந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்துகிறது. இதில் நமது முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளிப்படுத்துவதில் மிகவும் முக்கியம் வாய்ந்த இடங்கள். இதன் மூலம் தான் நாம் கவலையில் இருக்கும் போது தலைவலி உண்டாகிறது. நம் நெற்றியில் இட்டுக்கொள்ளும் இந்த திலகம் அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலில் உள்ள சக்தியானது வெளியேறாமல் இருக்க உதவி செய்கிறது.

kungumam

நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொள்ளும்போது அந்த கடவுளே நினைத்துக்கொண்டு தான் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும்.

குங்குமத்தை எடுத்து நம் நெற்றியில் வைத்துக் கொள்ளும் போது ‘ஸ்ரீயை நமஹ’ என்றோ அல்லது ‘மஹாலக்ஷ்மியே போற்றி’ என்றோ சொல்லியபடி தான் வைத்துக்கொள்ள வேண்டும். இது நமக்கு பல நன்மைகளை தேடித் தரும்.

குறிப்பாக பெண்கள் முன் வகிடு பகுதியில் மஹாலக்ஷ்மி குடியிருக்கிறாள். இதன் மூலம் பெண்கள் தங்களது முக முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் நன்மை ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் நம் முன்னோர்கள் இதை கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

kungumam

வீட்டில் வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, குங்குமம் தருபவர், குங்குமம் பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

குங்குமத்தை தான் இட்டுக் கொண்டு தான் பெண்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் குங்குமம் வைத்துக் கொள்வது தன்னம்பிக்கையை கொடுக்கும்.

கட்டைவிரலால் குங்குமத்தை இட்டுக் கொண்டால் துணிச்சல் அதிகமாகும்.

kungumam

ஆள்காட்டி விரலில் குங்குமத்தை இட்டுக் கொண்டால் நிர்வாகத் திறமை, ஆளுமை, எதிலும் முன்னுரிமை போன்றவை கிடைக்கும்.

நடுவிரலில் குங்குமத்தை இட்டுக் கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம் என்பதற்கு குங்குமம் ஒரு மிக பெரிய சான்று என்றே கூறவேண்டும்.

- Advertisement -