துளசிச் செடியை வீட்டில் வளப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

thulasi
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அப்படி நோய்நொடி இல்லாமல் வாழ ஆன்மிகத்தோடு அறிவியலையும் எடுத்துச் சொல்லும் நம் இந்து மதத்தின் அறநெறிகளும், இயற்கை சார்ந்த வழிபாடு களும் ஆன்ம பலமும், தேகபலமும் அளிக்கும் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. அத்தகைய வழிபாடுகளில் குறிப்பிடத்தக்கது துளசி வழிபாடு.

thulasi chedi

பொதுவாக பல மரங்கள், செடிகள் பகல் நேரத்தில் கரியமில வாயுவை சுவாசித்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும், இரவு நேரத்தில் அது தலைகீழாக நடக்கும். ஆனால், மகத்துவம் வாய்ந்த துளசி பூமிக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜனை மட்டுமே தரும் சிறப்பு வாய்ந்தது.

- Advertisement -

துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம், அதன் மூலிகைத் தன்மை நிறைந்த நறுமணத்தால், நம் சுவாசம் ஆரோக்கியமாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

thulasi chedi

பச்சை துளசி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் கலந்த தீர்த்தத்தை குடிக்கும்போது, நம் உடலில் அது ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்பட்டு உடலுக்கு நன்மை செய்கிறது.

- Advertisement -

நான்கு துளசி இலைகள், ஒரு ஆப்பிளுக்கு சமம் என்றே சொல்லலாம். ஒருவர் தினமும் துளசிக் கொழுந்துகள் நான்கைச் சாப்பிட்டுவந்தால், அவருக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். ஆயுள் கூடும். ஏற்கெனவே இருக்கும் நோயின் வீரியம் மெள்ள மெள்ள குறையும்.

thulasi chedi

துளசி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்க் கட்டிகள் அழியும். அது திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும், புற்றுநோய் கதிரியக்க  சிகிச்சை எடுத்திருந்தால், அந்த சிகிச்சையின் பக்க விளைவுகளிலிருந்தும் துளசி காக்கும்.

- Advertisement -

உலகில் 200க்கும் அதிகமான துளசி வகைகள் இருக்கின்றன. உருவ அமைப்பு வேறுபட்டு இருந்தாலும், அவற்றின் பலன்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன.

thulasi

பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை, ஓசோன் (O3) வாயுவை வெளியிடுமாம் துளசி. இதனாலேயே நம் முன்னோர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, துளசிச் செடியை வணங்க ஆரம்பித்தனர் போலும்.

துளசிச் செடியை வலம் வருவதால், ஓசோன் வாயு நம் சுவாசத்தின் மூலம் உள்சென்று உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியும், மூளைக்கு சுறுசுறுப்பையும் தருகிறது. மரங்கள் வளர்க்க முடியாத சூழ்நிலையில், மொட்டைமாடி, வாசல், பால்கனி போன்றவற்றில் துளசிச் செடியை வளர்ப்பதன் மூலம், பரிசுத்தமான பிராண வாயுவைப் பெறலாம்.

thulasi

துளசி செடியை பற்றிய சில சுவாரசிய செய்திகள்

துளசிச் செடிக்கு இடியைத் தாங்கும் சக்தி உண்டு என்று அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளார்கள்.

நம் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பாதுகாப்பதற்காக அதனைச்சுற்றி துளசிச் செடியை நட்டு வைக்கப் போவதாக சில தகவல்கள் உண்டு. ஏனென்றால் தாஜ்மஹாலை காற்று மாசுபாட்டில் இருந்து காப்பதற்காகவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும் துளசி செடியை நட்டு வைக்கலாம் என்பது அறிவியலாளர்களின் ஆலோசனையாக உள்ளது. கல்லினால் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை துளசி செடி பாதுகாக்கும் என்றால் ரத்தமும் சதையும் கொண்ட மனிதனுக்கு அது எவ்வளவு நன்மை தரும் என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Thulasi

நான் பெருமாள் கோவிலுக்கு சென்று நம் மன அமைதிக்கு பெருமாளை வழிபடுவோம். ஆனால் அந்த கோவில்களில் நம் உடல்நலத்திற்கு துளசி தீர்த்தத்தை பிரசாதமாக தருவார்கள். மனோவியலும் அறிவியலும் ஒன்றாக சேர்ந்தது தான் இந்து தர்மம் என்பதை இந்தப் பழக்கத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -