வெலிங்டனில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். துவக்க ஆட்டக்காரர் செபர்ட் 43 பந்தில் 84 ரன்கள் அடித்தார். அந்த அணியின் ஆல்ரவுண்டரான குகளின் 7 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 20 ரன்கள் அடித்து இறுதியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இந்நிலையில், குகளின் குறித்து முக்கியமான செய்தி இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 27 வயதாகும் குகளின் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் கடத்தி சென்று அனுபவித்ததாக அவரின் மீது வழக்கு தொடரபட்டது.
பிறகு அந்த வழக்கில் இருந்து மீண்டு வந்து தற்போது தேசிய அணியில் விளையாடி வரும் இவர் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். இவருக்கு திறமை இருந்தும் அணியில் இடம்பிடிக்க நீண்ட நேரம் ஆனதுக்கு காரணம் இவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே என்று இணையத்தில் இப்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்