பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் புல்வாமா மாவட்டத்தில் ஏற்படுத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 44 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாமை முழுமையாக அழித்தது.
இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டமான போர் சூழல் ஏற்பட்டது. பிறகு பாகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியதால் அதனை தடுக்க தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் போர் விமானத்தில் விரட்டி சென்று பிறகு, பாகிஸ்தான் நாடு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். இன்று அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு அனுப்ப உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
அபிநந்தனின் வருகையை அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் அவருக்கு கையால் வரையப்பட்ட அபிநந்தனின் புகைப்படத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரிசளித்துள்ளார். இதோ சேவாக் அவர்கள் வெளியிட்ட பதிவு :
How proud we are to have you ! Bow down to your skills and even more your grit and courage ? #WelcomeBackAbhinandan . We love you and are filled with pride because of you.#WeAreSupposedToTellYouThis pic.twitter.com/IfqBFNNa3T
— Virender Sehwag (@virendersehwag) March 1, 2019
அதில் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. உங்களின் திறமை மற்றும் தைரியத்திற்கு முன்னாள் நான் தலை வணங்குகிறேன் என்றும் மேலும், உங்களை இந்திய மக்களாகிய நாங்கள் அனைவரும் நேசிக்கிறோம் என்றும் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பரிசு என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே :
கவுதம் கம்பீர் : 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஜெர்ஸியை பாதுகாத்து வரும் கம்பீர்
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்
English Overview : Sehwag tweets about abhinandan returns