அமாவாசை அன்று இதை மட்டும் செய்தால் போதும். நம்முடைய வீட்டிற்கு செய்வினை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம்.

amavasai
- Advertisement -

நிறையபெருக்கு தொடர் கஷ்டங்கள் வரும்போது மனதில் அவர்களை அறியாமலேயே பயம் வந்துவிடும். நாம் வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக நமக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ. யாராவது ஏவல் பில்லி சூனியத்தை ஏவிவிட்டு இருப்பார்களோ? என்று, இப்படியாக மனதைப் போட்டு குழப்பிக் கொள்வார்கள். இதைப்பற்றி யாரிடம் போய் கேட்பது என்று தெரியாமல் திணறி வருவார்கள். என்ன செய்தால் நம்முடைய வீட்டில் செய்வினை இருப்பதை அறிந்துகொள்ள முடியும் என்பதைப் பற்றிய ஒரு தகவலையும், ஒருவேளை நம்முடைய வீட்டில் செய்வினை இருப்பதாக ஊர்ஜிதமாகி விட்டது. அதற்கு என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த சோதனையை செய்ய முருங்கைக்கீரை நமக்கு தேவைப்படும். முருங்கைக் கீரையை வாங்கி வந்து அல்லது மரத்திலிருந்து உடைத்து வந்தோ காம்புகள் இல்லாமல் பொரியலுக்கு சமைப்பது போல சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த முருங்கைக்கீரையில் தண்ணீர் எதுவும் ஊற்றக்கூடாது. சாறு பிழிந்து கொள்ளுங்கள். 2 ஸ்பூன் அல்லது மூன்று ஸ்பூன் சாறு கிடைத்தால் கூட போதும்.

- Advertisement -

அமாவாசை அன்று காலையில் எதுவுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்கும்போது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகாரத்தை செய்பவர் தெற்கு பார்த்தவாறு நின்றோ அமர்ந்தோ உங்களுடைய உள்ளங்கைகளில் இந்த முருங்கைக் கீரை சாறை ஊற்றி அரை மணிநேரம் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் நீங்கள் எதுவும் பேசக்கூடாது. உங்கள் கையில் இருக்கும் முருங்கைக்கீரை சாறானது திரிந்து போனால் உங்களிடம், உங்கள் வீட்டிலும் செய்வினை இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

உடனே பயந்து விட வேண்டாம். செய்வினை கோளாறு அகல மகாபெரியவா சொன்ன ஒரு சின்ன பரிகாரத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெண்கள் தினமும் சமைக்கும்போது அரிசியை எடுப்பார்கள் அல்லவா. அப்போது ஒரு கைப்பிடி அரிசியை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் 21 நாட்கள் தொடர்ந்து சேகரித்து வரவேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு கைப்பிடியாக சேர்ந்த அரிசியை 21வது நாள் மொத்தமாக எடுத்து தயிர் சாதம் செய்து கொள்ளுங்கள். இந்த சாதத்தை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு எடுத்துச் சென்று நிவேதனம் செய்து, அந்த தயிர் சாதத்தை, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும். இப்படி செய்தால் எவ்வளவு பெரிய செய்வினையாக இருந்தாலும் அந்த செய்வினை உங்களை விட்டு அகலும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

‘நம்முடைய வீட்டிலும் செய்வினை கோளாறு இருக்குமோ’ என்ற சந்தேகத்தில் கஷ்டத்தோடு வந்த ஒரு குடும்பத்திற்காக மகா பெரியவா இந்த பரிகாரத்தை சொல்லியுள்ளார். இந்த பரிகாரத்தை செய்த அந்த குடும்பம் 48 நாட்களில் பிரச்சனையில் இருந்து விடுபட்டது என்ற விஷயத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்.

- Advertisement -