இந்த உயிர் உங்கள் வீட்டு வாசல் தேடி வந்தால், உங்கள் வீட்டிற்குள் செய்வினை வரப்போகுது என்று அர்த்தம்.

veedu
- Advertisement -

இந்த பூமியில் நல்ல சக்தி இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கெட்ட சக்தி இருக்கிறது என்பதும் உண்மைதான். இதை சில பேர் நம்பவே மாட்டாங்க. ஆனால் கெட்ட சக்தியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும். கெட்டதும் இந்த பூமியில் உலாவிக் கொண்டிருக்கிறது என்று. அதனால் நாம் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிலும் அலட்சியம் வேண்டாம். அதற்காக நமக்கு கெடுதல் நடந்து விடுமோ என்று நினைத்து எல்லா விஷயத்திலும் பயந்து நிறைய பணம் காசு செலவு செய்து சில பொய்யான மாந்திரீக தாந்திரீகம் செய்பவர்களை நம்பி மோசம் போகாதீங்க. அதிலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

செய்வினை நமக்கு இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் நம்மால் உணர முடியும். அதற்காக இந்த அறிகுறி எல்லாம் இருந்தால் செய்வினை நிச்சயமாக இருக்கும் என்றும் நினைத்து பயப்படக்கூடாது. பிறகு எப்படி தான் தெரிந்து கொள்வது என்று யோசிக்கிறீர்களா பதிவை முழுமையாக படித்தால் உங்களுக்கே புரியும்.

- Advertisement -

நம்முடைய குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டம் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். இதனுடன் ஒரு சில அறிகுறிகள் நமக்கு தெரிய தொடங்கும். வீட்டில் இருப்பவர்கள் உடல்நிலை சரியா இருக்காது. நன்றாக வேலை செய்பவர்கள் சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொள்வார்கள். மருத்துவர்களுக்கு புரியாத வியாதி, இரண்டு கண்களும் அப்படியே உள்ளே போனது போல இருக்கும். முகம் பேய் அடைந்தது போல இருக்கும். உடம்பில் திடீரென கட்டிகள் வரும். மருத்துவரிடம் மருந்து சாப்பிட்டாலும் அந்த கட்டி குணமாகாது.

ஏன் தான் கடவுள் நம்மை இப்படி சோதிக்கின்றானோ! என்று சொல்லும் அளவிற்கு கஷ்டங்கள் வரும். இதனுடனே நம் வீட்டை தினம் தோறும் சொல்லி வைத்தது போல கருவண்டு வந்து சத்தமிட்டு வட்டமிட்டு கொண்டே இருக்கும். கருவண்டு ஒரு வீட்டிற்குள் நுழையவே கூடாது. தினமும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி கருவண்டு வீட்டிற்குள் நுழைய பார்க்கும். உங்களுடைய வீட்டில் கருவண்டு நுழையாமல் பாதுகாக்க ஜன்னலை மூடி வைக்கலாம் அல்லது வளை போட்டு வைக்கலாம். வாயில்லா ஜீவன்களான பல்லி, குருவி, காகம் என்று எதுவுமே உங்கள் வீட்டின் அருகில் வராது. நீங்கள் நாய்க்கு சாப்பாடு வைத்தால் கூட அது வந்து சாப்பிடாது என்றால் பார்த்துக்கோங்க.

- Advertisement -

அடுத்தபடியாக வௌவால். வௌவாலின் மூலம் செய்வினை வைத்து நம் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்றும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக நம் வீட்டு நிலை வாசலுக்கு வெளியே, நம் வாசல் கதவை திறந்த உடன் வாசல் படியில் வவ்வால் ரத்த காயத்துடன் செத்து கிடக்கவே கூடாது. அப்படி இரத்தத்தோடு வௌவாலை நீங்கள் பார்த்தால் உங்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு செய்வினை பிரச்சனை இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். அதன் பின்பு உங்கள் வீட்டின் குடும்ப தலைவரின் ஜாதகத்தை கொண்டு போய் நம்பத் தகுந்த ஜோதிடரிடம் காண்பித்து கெட்டது நடப்பதற்கு ஏதாவது சாத்தியம் உள்ளதா என்பதையும் ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அப்படி உங்கள் வாழ்க்கையில் கெட்டது நடப்பதற்கு வாய்ப்பு இருந்தால் நல்ல ஜோதிடர்கள் உங்களுடைய ஜாதகத்தை வைத்து சொல்லிவிடுவார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றால் அவ்வளவுதான். அந்த வௌவாலை சுத்தம் செய்த இடத்தில் நன்றாக மஞ்சள் தண்ணீர், கோமியம் தெளித்து விட வேண்டும். உங்களுடைய வீட்டை முழுமையாக சுத்தம் செய்து கோமியம் தெளித்து வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு விளக்கு ஏற்றி குலதெய்வத்தை ஒருமுறை வழிபாடு செய்து கொள்ளுங்கள். முடிந்தால் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கிருந்து ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனை எல்லாம் எதுவும் வராது.

தெய்வத்தை நம்புங்கள். அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காதீர்கள். உங்களால் முடிந்த உதவியை இல்லாதவர்களுக்கு செய்யுங்கள். நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள். எந்த பிரச்சனையும் உங்கள் குடும்பத்திற்கு பெரிய பாதிப்பை கொடுக்காது. எந்த பிரச்சனையும் உங்கள் குடும்பத்திற்கு வரவும் வராது. நாம் அடுத்தவர்களுக்கு தீமை செய்தால்தான், அடுத்தவர்களால் தீமை நமக்கு வரப் போகிறது. நல்லவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -