அதிவிரைவாக உங்களை தாக்கக்கூடிய செய்வினை, ஏவல் பில்லி சூனியத்தை கூட, ஒரு நொடிப்பொழுதில் பூட்டு போட்டு தடுத்து நிறுத்தும் பூண்டு.

poondu
- Advertisement -

ஒரு மனிதன் வாழ்வில் வீழ்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நமக்கு பிடிக்காதவர்கள் நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப் பட்டு முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலை தூண்டி விட்டாலும், நம்முடைய வாழ்க்கையில் போராட்டம் தொடங்கி விடும். அந்த வரிசையில் செய்வினை ஏவல் பில்லி சூனியம் இப்படிப்பட்ட அளவுக்கு கூட மனிதர்கள் பெரிய பெரிய அளவில் பிரச்சனைகளை ஏவி விடுகிறார்கள்.

ஆனால் இது மிக மிகத் தவறு. அடுத்தவர்கள் நன்றாக வாழக்கூடாது என்பதற்காக நாம் ஏவி விடக்கூடிய எதிர்மறை ஆற்றலானது, ஒரு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் நம்மை தான் வந்து தாக்கும். அடுத்தவர்களுக்கு நீங்கள் சூனியம் வைக்கவில்லை. உங்களுக்கு நீங்களே சூனியம் வச்சிக்கிறீங்க. முதல்ல எதிராளிகள் அழியவேண்டும் என்ற நினைப்பில் இருந்து வெளிவர வேண்டும். அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைப்பவர்கள் நிச்சயம் தானும் கெட்டுப் போகத் தான் செய்வார்கள்.

- Advertisement -

சரி, யாரோ ஒருவர் நமக்கு செய்வினை வைத்து விட்டார்கள். வயிற்றெரிச்சல் கண் திருஷ்டியால் மனதிற்குள்ளேயே புழுங்கி புழுங்கி நமக்கு தீவினைகளை செய்யத் தொடங்கிவிட்டார்கள். அந்த எதிர்மறை ஆற்றலானது நம் வீட்டிற்குள் வராமல் இருக்க நம்மை தாக்காமல் இருக்க என்ன செய்வது. ஒரு சுலபமான பரிகாரம் இதோ உங்களுக்காக.

பொதுவாக கண்திருஷ்டி போவதற்கு பச்சை மிளகாய்களை கோர்த்து நிலை வாசலில் மாட்டி வைத்திருப்பார்கள். எலுமிச்சம் பழத்துடன் நாம் பார்த்திருப்போம் அல்லவா. அதே போல தான் ஒரு மஞ்சள் நிற நூலை ஊசியுடன் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு பூண்டு, ஒரு வரமிளகாய், ஒரு பூண்டு ஒரு வரமிளகாய் என்று மாற்றி மாற்றி கோர்க்க வேண்டும்.

- Advertisement -

இப்படியாக ஏழு பூண்டு, ஏழு வரமிளகாய்களை கட்டி நிலை வாசலில் குலதெய்வத்தை நினைத்து கட்டி தொங்க விட்டு விடுங்கள். அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்யலாம். அப்படி இல்லை என்றால் அமாவாசை தினத்தில் செய்யலாம். கட்டிய இந்த இரண்டு பொருட்களையும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். பழைய பூண்டு மிளகாயை கால் படாத இடத்தில் தூக்கி போட்டு விடுங்கள்.

உங்கள் வீட்டிற்குள் எந்த விதமான எதிர்மறை ஆற்றலும் கண் திருஷ்டியும் நுழையாமல் இருக்கும். வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு செய்வினை பாதிப்பு இருந்தாலும் அது வீட்டிலிருந்து வெளியேறி விடும். உங்களுடைய வீட்டில் ஏதாவது கண்ணுக்கு தெரியாத அமானுஷ்யமான பிரச்சனை இருந்தாலும் அது வீட்டை விட்டு வெளியேறி விடும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். நம்பமுடியாத பெரிய பலன்களை அடையலாம்.

- Advertisement -