உங்கள் ராசிக்கு எந்தப் பொருளை நீங்கள் தானம் செய்யக்கூடாது தெரியுமா? 12 ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்!

puli-astro
- Advertisement -

தானம், தர்மம் செய்வது புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்கு தான் என்பது அனைவரின் நம்பிக்கை. ஒரு பொருளை இன்னொருவருக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைப்பது எந்த அளவிற்கு உண்மையோ! அதே அளவிற்கு ஒரு சில யோகங்களில், ஒரு சில திதிகளில் இந்த சில பொருட்களை தானம் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் யோகமும் போய்விடும் என்பதும் சாஸ்திர நம்பிக்கை தான். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் செய்யக் கூடாத தானங்கள் என்னென்ன? அது ஏன்? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

ராஜ யோகம், கோடீஸ்வர யோகம், குரு சந்திர யோகம் போன்ற யோகங்கள் இருக்கும் ஜாதகர்கள் எந்த ராசியினர் ஆக இருந்தாலும் நீங்கள் உபயோகப்படுத்திய வஸ்திரங்களை தானம் செய்வது கூடாது. நீங்கள் புதிய துணிமணிகளை வாங்கி தானம் செய்யலாம் ஆனால் நீங்கள் ஏற்கனவே அணிந்த வஸ்திரங்களை தானம் செய்வதன் மூலம் உங்களிடமிருக்கும் யோகம் உங்களை விட்டு நீங்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

வஸ்திர தானம் என்பது பெறற்கரிய பலன்களை பெற்றுக் கொடுக்கக் கூடிய அற்புத தானம் ஆகும். இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நீங்கள் செய்யும் வஸ்திர தானம் பெரும் புண்ணியத்தை சேர்க்கும். ஆனால் யோகம் உள்ள காலத்தில் செய்யும் தனமானது யோகத்தை தடை செய்யும் என்பதால் வஸ்திர தானம் செய்யும் பொழுது ஒரு ரூபாயை பெற்றுக் கொண்டு தானம் செய்யலாம். இங்கு தானத்தை தடை செய்யவில்லை! செய்யக்கூடிய தானத்திலிருந்து நீங்கள் யோகப் பலன்கள் இழக்கக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

vasthira-dhanam

உங்களிடம் இருக்கும் தரித்திரம் எப்படி தானம் செய்யும் பொழுது அவர்களுக்கு செல்லும் என்று கூறப்படுகிறதோ! அதே போல உங்களிடம் இருக்கும் யோக பலன்களும் மற்றவர்களுக்கு சென்றடையும் வாய்ப்புகள் உண்டு. எனவே தரித்திரம் உள்ளவர்கள் வஸ்திர தானம் செய்யும் பொழுது உப்புத் தண்ணீரில் நனைத்து காய வைத்த வஸ்திரங்களை தானம் செய்வது சிறப்பு! இதனால் உங்களிடம் இருக்கும் தரித்திரம் மற்றவர்களுக்கு செல்லாது.

- Advertisement -

அதே போல உங்களிடம் இருக்கும் யோக பலன்கள் மற்றவரிடம் செல்லாமல் இருக்க மகாலட்சுமி நிறைந்திருக்கும் உப்பு, புளி போன்றவற்றை தானம் செய்யக்கூடாது. உப்பு, புளி தானம் செய்தாக வேண்டிய நிலையில் ஒரு ரூபாயாவது பெற்றுக் கொண்டு தானம் செய்யுங்கள். யோகா பலன்கள் நிறைந்து உள்ளவர்கள் வெற்றிலை, பாக்கை தானம் கொடுக்கும் பொழுது சுண்ணாம்பை சேர்த்து தானம் கொடுக்க கூடாது. வெள்ளிக் கிழமையில் எண்ணெய், பால், தயிர் போன்றவற்றை தானம் செய்வதும் யோக பலன்களை தடை செய்யும்.

epsam-salt

யோக பலன்கள் உள்ளவர்கள் மற்றவர்களுடைய வஸ்திரங்களையும், நகைகளையும், காலணிகளையும் பயன்படுத்தக் கூடாது. அதே போல உங்களுடைய வஸ்திரங்களையும், நகைகளையும், காலணிகளையும் மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தானம் செய்வதில் எந்த தவறும் இல்லை! ஆனால் குறிப்பிட்ட சில கால கட்டங்களில் இந்த பொருட்களை தானம் செய்வதால் உங்களுடைய யோகப் பலன்கள் மற்றவர்களுக்கு செல்வது மட்டுமல்லாமல், அவர்களிடம் இருக்கும் தரித்திரம் உங்களுக்கு வந்து சேரும் என்பதும் உண்மை.

- Advertisement -