செலவே இல்லாமல் சருமத்தை சிவப்பழகாக மாற்ற சமையல் அறையில் இருக்கும் சோம்பு போதும்.

face22
- Advertisement -

நிறைய செலவு செய்யாமல் இயற்கையான சில பொருட்களை வைத்து நம்முடைய முகத்தை அழகாக மாற்றலாம். முகத்தில் உள்ள தோல் சுருக்கங்கள் நீங்க, கரும்புள்ளிகள் மறைய, தழும்புகள் மறைய, முகப்பரு நீங்க, தேவையான ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்புக்கு சமையலறையில் இருக்கக்கூடிய சோம்புத் தவிர இன்னும் ஒரு சில பொருட்களைக்கூட பயன்படுத்தப் போகின்றோம். வாங்க நேரத்தை கடத்தாமல் உங்கள் அழகை மேலும் அழகாக்க இந்த ரெமிடியை எப்படி தயார் செய்வது என்று பார்த்து விடுவோம்.

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீரில் லேசாக சூடாகி வந்ததும் சோம்பு – 1/2 ஸ்பூன், சிறிய துண்டு பட்டை – 1 புதினா இலைகள் – 10, போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 1/2 டம்ளர் அளவு சுண்டி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் மிக மிக முக்கியம். இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. இதை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால் பத்து நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக நாம் ஒரு பேஸ் பேக் தயார் செய்ய வேண்டும். இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய அரிசி மாவு, கடலை மாவு, பச்சைபயிறு மாவு, கோதுமை மாவு, என்று உங்களுடைய வீட்டில், உங்கள் சருமத்துக்கு ஏற்ற எந்த மாவு இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். அதை தேவையான அளவு ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த மாவில் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா அந்த தண்ணீரை ஊற்றி கலந்து ஃபேஸ் பேக் போல ரெடி பண்ணிக்கோங்க.

இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாள் உங்களுடைய முகத்தில் போட வேண்டும். கழுத்து மற்றும் முகம் முழுவதும் இந்த பேக்கை இரண்டு லேயராக கூட அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகம் நன்றாக காய்ந்து விடும். அதன் பின்பு முகத்தை தண்ணீரில் நனைத்துக்கொண்டு வட்ட வடிவில் 5 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டால் முகம் பொலிவடையும். முகத்தில் இருக்கும் தேவையில்லாத கரும்புள்ளிகள் கொப்பளங்கள் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கும்.

- Advertisement -

உங்களுடைய முகத்தில் ஸ்கின் அலர்ஜி கொப்பளங்கள் முகப்பருக்கள் அதிகமாக இருக்கிறது என்றால் புதினா இலைகளுக்கு பதிலாக வேப்ப இலைகளை சேர்த்து கூட நீங்கள் அந்த தண்ணீரை தயார் செய்து கொள்ளலாம்.‌ அது உங்களுடைய விருப்பம் தான்.

தொடர்ந்து மூன்று மாதம் இந்த பேக்கை பயன்படுத்தி வர முகத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி முகத்தில் இருக்கும் தழும்புகள் படிப்படியாக குறைவதை பார்க்க முடியும். நிறமும் படிப்படியாக அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களால் பேஸ்புக் போட முடியவில்லை. நேரம் இல்லை என்ற சூழ்நிலை இருந்தால், தயார் செய்து வைத்திருக்கும் தண்ணீரை அப்படியே முகத்தில் ஸ்பிரே செய்து கூட இரவு தூங்கச் செல்லலாம்.  உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய அழகு மேலும் அழகாக இது ஒரு சுலபமான குறிப்பு.

- Advertisement -