செலவான பணம், மீண்டும் வரவாக உங்க கைக்கே திரும்ப வர இதை செய்யுங்க.

mahalashmi3
- Advertisement -

பணவரவு அதிகமாக இருக்க வேண்டும். பரிசல் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும். பீரோவில் பணம் கட்டு கட்டாக சேர வேண்டும். ஆனால் வந்த பணம் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் கையை விட்டு திரும்பி போகக் கூடாது. பணம் செலவே ஆகக்கூடாது என்று நினைப்பது மனிதர்களுடைய இயல்புதான். ஆனால் வந்த மகாலட்சுமியை எதற்கும் பயன்படுத்தாமல் பீரோவில் வைத்து பூட்டி வைப்பது ரொம்ப ரொம்ப தவறு.

வரவுக்கு ஏற்ற செலவு இருக்க வேண்டும். அப்போதுதான் நம் கைக்கு வந்த பணத்திற்கே ஒரு அர்த்தம் இருக்கும். எந்த ஒரு பயன்பாட்டிற்கும் உதவாத பணம் பீரோவில் தேங்கி கிடந்தால் என்ன பயன். ஆகவே, வரவுக்கேற்ற செலவு செய்யுங்கள். அப்போதுதான் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து உங்களுக்கு மீண்டும் மீண்டும் பணவரவை கொடுத்துக் கொண்டே இருப்பாள்.

- Advertisement -

சரிங்க, செலவு செய்த பணம் மீண்டும் இரட்டிப்பு வரவாக நம் கைக்கு வர வேண்டும் என்றால் என்னதான் செய்வது. பணத்தை எப்படித் தான் செலவு செய்வது. மகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொண்டு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செலவு செய்த பணம் மீண்டும் உங்கள் கைக்கே திரும்ப வர

பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அடுத்தவர்கள் கையில் கொடுக்கும்போது, அப்படியே முழுசாக விரித்தபடி கொடுக்கக் கூடாது. பர்ஸிலிருந்து எடுத்த பணத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு, அதை உங்களை பார்த்தவாறு ஒரே ஒரு மடிப்பு மடியுங்கள். இப்படி உங்கள் கையில் இருக்கும் நோட்டை உங்களைப் பார்த்தவாறு மடிக்கும் போது, இந்த பணம் சீக்கிரம் என்னிடமே திரும்பி வரவேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டு மடிக்க வேண்டும். உங்களைப் பார்த்தவாறு மடித்திருக்கும் இந்த பணத்தை அடுத்தவர்களுடைய கையில் கொடுங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்குகிறீர்கள், அல்லது மற்ற ஏதாவது பொருட்களை வாங்கும் போது பணம் கொடுப்பீர்கள் அல்லவா. அப்போது இந்த சூட்சமமான வித்தையை கையாளுங்கள். இப்படி செய்தால் செலவான பணம் சீக்கிரமே ஏதாவது ஒரு வகையில் வரவாக உங்களை வந்து சேரும்.

தவிர பணத்தை செலவு செய்யும் போது பணம் என்னை விட்டு வெளியே போகிறதே என்று வருத்தத்தோடு செலவு செய்யக் கூடாது. பணத்தை சந்தோஷமாக மனநிறைவோடு செலவு செய்யும் போது தான் அந்த பணம் மீண்டும் உங்கள் கையில் வந்து சேரும். மகாலட்சுமிக்கு அப்போதுதான் மனம் மகிழ்ச்சியடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சோகமாகவே பணத்தை கையில் இருந்து எடுத்து வெளியே கொடுத்தால் சோகமாக சென்ற மகாலட்சுமி, திரும்பவும் நம் கையில் வரவே மாட்டாள். பணத்தை உங்கள் தேவைக்காக செலவு செய்யும் போது மட்டும் தான் மேலே சொன்ன இந்த முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பஞ்ச பாத்திர தண்ணீரை புனித தீர்த்தமாக மாற்றுவது எப்படி?

அடுத்தவர்களுடைய உதவிக்காக, பணத்தை தானமாக கொடுக்கும் போது, இப்படி நினைக்கக் கூடாது. தான தர்மங்களுக்கு செய்யக்கூடிய செலவு மன நிறைவோடு செய்யப்பட வேண்டும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -