பஞ்ச பாத்திர தண்ணீரை புனித தீர்த்தமாக மாற்றுவது எப்படி?

theertham
- Advertisement -

தினம்தோறும் கோவிலுக்கு சென்று அங்கு தரக்கூடிய புனித தீர்தத்தை வாங்கி குடிப்பது நாம் எல்லோருக்கும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். ஆனால் தினம் தோறும் இப்படி ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று புனித தீர்த்தத்தை நம்மால் வாங்கி குடிக்க முடியாது.

இதற்கு பதிலாக நம் வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய பஞ்சபாத்திர தண்ணீரை புனித தீர்த்தமாக மாற்றி, அதை தினமும் பருகி வந்தோம் என்றால், தினம் தினம் பாசிட்டிவ் எனர்ஜியை நம்மால் பெற முடியும். பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் வைக்கும் அந்த வெறும் தண்ணீரை, கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்திற்கு நிகராக மாற்றுவது எப்படி பதிவை முழுமையாக பதித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பஞ்ச பாத்திர தண்ணீரை தீர்த்தமாக மாற்றுவது எப்படி

முதலில் பூஜை அறையில் வைக்கக்கூடிய பஞ்ச பாத்திர தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். தினமும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு பழைய தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, புது தண்ணீரை வையுங்கள். அதில் ஒரு கிராம்பு, இரண்டு ஏலக்காய் இரண்டு துளசி இலைகளை போட்டு விட வேண்டும்.

தண்ணீரை மாற்றும்போது பழைய ஏலக்காய் கிராம்புத் துளசி இலைகளை கல்படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதுசாக இந்த மூன்று பொருட்களையும் போட வேண்டும். குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறைக்கும் முன்பாக அமர்ந்து உங்களுக்குத் தெரிந்த தெய்வத்தின் மந்திரத்தை சொல்லலாம்.

- Advertisement -

உதாரணத்திற்கு குலதெய்வத்தின் நாமத்தை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். ‘ஓம் நமசிவாய மந்திரம்’ சொல்லலாம். ஹனுமன் சாலிசா படிக்கலாம், அல்லது வேறு ஏதாவது அம்மன் பாடல்கள், அம்மன் போற்றிகள் தெரிந்தாலும் சொல்லலாம். இப்படி நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் போது, பாடல்களைப் படிக்கும் போது, உங்களுக்கு பக்கத்தில் பஞ்ச பாத்திரத்தில், நீங்கள் தயார் செய்த தண்ணீர் இருக்க வேண்டும்.

நீங்கள் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க அந்த நேர்மறை ஆற்றலும் இறை அருளும், அந்த தீர்த்தத்தில் இறங்கிவிடும். அதிலும் செம்பால் செய்யப்பட்ட பஞ்ச பாத்திரத்தில் நீர் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு பூஜையை நிறைவு செய்துவிட்டு இறுதியாக பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் அந்த தண்ணீரை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தீர்த்தம் போல பருகிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த தண்ணீரை தினமும் குடித்து வருவதன் மூலம் உங்களை சுற்றி எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அதாவது கோவிலுக்கு சென்று தீர்த்தம் பருகினால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலனை வீட்டில் இருந்தபடியே நீங்கள் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: பல நாள் பணக்கஷ்டமும் அஞ்சு நிமிதசத்துல பஞ்சாய் பறக்க அஞ்சு ரூபாய் நாணயம் போதும்.

தினமும் இப்படி வழிபாட்டை மேற்கொள்வது மிகச்சிறந்த பலனை கொடுக்கும். முடியவில்லை என்பவர்கள் வாரத்தில் இரண்டு நாள் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை மட்டுமாவது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நன்மை நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -