பணத்தை கொடுக்கும் போது இந்த ஒரு சூட்சம வார்த்தையை மட்டும் தவறாமல் சொல்லிப் பாருங்கள். உங்கள் கையை விட்டு செல்லும் ஒவ்வொரு ரூபாயும் பல மடங்காக பெருகி உங்களிடமே திரும்ப வரும்.

cash in hand
- Advertisement -

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்றே. பணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கைக்கு சமம். இப்படி நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் பணத்தை சுற்றியே பின்னி பிணைந்து கொண்டிருக்கிறது அந்த பணத்தை சம்பாதிக்க தான் நாமும் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த பணத்தை சம்பாதிக்க பல வழிகள் நாம் முயற்சி செய்தாலும் கூட சம்பாதித்த பணம் நம்மை வந்தடையும், வந்த பணம் நம்மிடம் தங்கி பல மடங்காக பெறுகவும் சில வழிமுறைகளை ஆன்மீகம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. அதில் ஒன்றான இந்த சூட்சம வார்த்தை பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணம் நம்மிடம் வரும் போது எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, அதே போல பணம் நம் கையை விட்டு செல்லும் போதும் மகிழ்ச்சியாக மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. நாம் ஒரு பொருளையோ, நகையோ வாங்கும் போது சந்தோஷமாக வாங்குவோம். ஆனால் கடனோ பிறர் வந்து கேட்டால் அதற்கு கொடுக்கும் போதோஅப்படி கொடுக்க முடியாது என்பதும் உண்மை தான்.

ஆனால் பணத்தை கொடுக்கும் போது வருத்தத்துடன் இதை ஏன் கொடுக்கிறோம் என்ற எண்ணத்துடனும் கொடுக்கும் போது பணம் ஆனது திரும்ப நம்மிடம் வராது என்று சொல்லப்படுகிறது. எந்த காரியத்திற்காக பணம் நம்மிடம் இருந்து சென்றாலும் பணத்தை கொடுக்கும் போது இந்த ஒரு வார்த்தையை இந்த எண்ணையும் சேர்த்து சொல்லும் போது நம் கையில் இருந்து செல்லும் பணம் பல மடங்காக திரும்பி வரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஸ்ரீம் ஸ்ரீரிஷி 528
என்று இந்த வார்த்தையும், இந்த சூட்சம எண்ணையும் நாம் பணம் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டும். நீங்கள் கடனுக்காகவோ பிறரிடம் வாங்கியதற்காக திருப்பி கொடுக்கிறீர்கள் என்றாலுமே கூட இப்பொழுது செல்லும் பணம் என்னிடம் நல்ல முறையில் பல மடங்காக பெருகி திரும்ப வர வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு இந்த வார்த்தையும் சொல்லிய பிறகு பணத்தை தர வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நாளை தேய்பிறை அஷ்டமி! பஞ்சத்தைப் போக்க பைரவர் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கிக் கொடுங்கள் போதும். உங்களுடைய வருமானம் செல்வாக்கு பல மடங்கு பெருக தொடங்கும்.

இப்படி உங்கள் கையில் இருந்து செல்லும் பணம் பல மடங்காக பெருகி நிச்சயம் உங்களிடம் திரும்பி வரும். இந்த சூட்சம எண் பரிகாரத்தையும் இந்த மந்திர வார்த்தையும், சொல்லி உங்களிடம் இருந்து செல்லும் இந்த பணத்தை பல மடங்காக பெருக்கி திரும்ப வர வழி தேடி கொள்ளலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -