நாளை தேய்பிறை அஷ்டமி! பஞ்சத்தைப் போக்க பைரவர் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கிக் கொடுங்கள் போதும். உங்களுடைய வருமானம் செல்வாக்கு பல மடங்கு பெருக தொடங்கும்.

bairava
- Advertisement -

தொழிலில் நொடிந்து போனவர்கள், கடன் வாங்கி தங்களுடைய வாழ்க்கையை தொலைத்தவர்கள், எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் திருஷ்டியால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், எதிரி தொல்லையால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுபவர்கள், இப்படி எல்லோரும் நாளைய தினம் இந்த பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

உங்களுக்கு வாழ்க்கையில் எந்த கஷ்டம் இருந்தாலும் அந்த கஷ்டத்தை ஒரு நொடிப் பொழுதில் தீர்க்கக் கூடிய சக்தி இந்த கால பைரவருக்கு உண்டு. நாளைய தினம்(11-06-2023) தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரை எப்படி வழிபாடு செய்வது. அவருக்கு எந்தெந்த பொருட்களை தானமாக வாங்கி கொடுத்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையலாம் என்பதை பற்றிய விரிவான ஆன்மீகம் சொல்லும் தகவல்கள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

நாளை தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு:
வழக்கம் போல தான். ஏதாவது விசேஷ தினம், பூஜை செய்யக்கூடிய நாள் வந்துவிட்டது என்றால் பூஜையை செய்பவர்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். உங்களால் முடிந்தால் பிரம்மம் முகூர்த்த நேரத்தில் ஐந்து மண் அகல் விளக்குகளை எடுத்து அதில் நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், 5 எண்ணெய், 5 விதமான எண்ணெய்களையும் தனித்தனியாக ஐந்து விளக்குகளில் ஊற்றி திரி போட்டு பைரவரை நினைத்து வீட்டில் இந்த விளக்குகளை ஏற்றி மனமார உங்கள் பிரச்சனைகளை பைரவரிடம் சொல்லி அது சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், பஞ்சம் உங்கள் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படும்.

இதை பஞ்ச தீபம் என்று சொல்லுவார்கள். இதை அஷ்டமி தினத்தில் வீட்டில் ஏற்றலாம் தவறு கிடையாது. ஒரு சில பேருக்கு இலுப்பை எண்ணெய் விளக்கெண்ணெய் ஊற்றி வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு விருப்பமில்லாமல் இருக்கும். இந்த விளக்கை வீட்டில் ஏற்றுவது மனதிருப்தி கொடுக்காது என்றால், இந்த ஐந்து தீபங்களை தாராளமாக உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பைரவர் சன்னிதானத்தில் ஏற்றி பைரவரை வழிபாடு செய்யலாம். இந்த ஐந்து தீபங்களை தேய்பிறை அஷ்டமியில் பைரவரை நினைத்து ஏற்றினால் அவ்வளவு நல்லது. இது ஒரு வழிபாட்டு முறை.

- Advertisement -

அடுத்ததாக எல்லா சிவன்  கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி திதியில் ராகு கால நேரத்தில் பைரவர் சன்னிதியில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு ரொம்ப ரொம்ப உகந்த நாள். அதோடு தேய்பிறை அஷ்டமி வந்திருப்பதால் இந்த நாள் இரட்டிப்பு சிறப்பு வாய்ந்த நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டின் அருகில் பழமையான சிவன் கோவிலுக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரத்தை உங்கள் கைகளால் தானம் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் அந்த சிவப்பு நிற வஸ்திரத்தை பைரவருக்கு சாத்தி விட வேண்டும். அவருடைய பாதங்களில் அந்த சிவப்பு நிற வஸ்திரத்தை வைத்தால் கூட ரொம்ப ரொம்ப நல்லது. இந்த சிவப்பு நிற வஸ்திரத்தை தானம் கொடுத்து பைரவரை மனம் உருகி என்னுடைய தொழிலில் இருக்கும் நஷ்டம் சரியாக வேண்டும், எனக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும், கடன் பிரச்சனை குறைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டால் உங்கள் கஷ்டங்களை அந்த பைரவர் உடனடியாக சரி செய்து விடுவார்.

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி என்றால் பிறகு நம்முடைய நினைவிற்கு வருவது மிளகு தீபம். அந்த பைரவர் கோவிலுக்கு சென்றாலே இது ரொம்பவும் பிரபல்யமாக இப்போது பேசப்படுகிறது. கோவிலுக்கு வெளியிலேயே மிளகு தீபம் விற்கப்படுகின்றது. அதை வாங்கிக் கொண்டு போய் பைரவருக்கு ஏற்றி விடுங்கள். கடன் பிரச்சனை எல்லாம் காணாமல் போய்விடும்.

பைரவருக்கு சிவப்பு நிற பூக்கள் மிக மிக சிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. தயிர் சாதம் பிரசாதமாக செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். முடிந்தால் நாளை தயிர் சாதம் செய்து ஏழை மக்களுக்கு அன்னதானமாக கொடுங்கள். ரோட்டோரங்களில் யாசகம் கேட்பார்கள் அல்லவா. நாளை மதியம் நல்ல வெயில் நேரம் அப்போது உங்களுடைய கைகளால் உங்களுடைய வீட்டில் பசு தயிரில், தயிர் சாதம் செய்து அதன் மேலே சுவைக்காக மாதுளம் பழம் முத்துக்களை தூவி, உங்கள் வசதிக்கு ஏற்ப அதை பேக் செஞ்சுக்கோங்க. கூடவே வாட்டர் பாட்டிலும் வாங்கிக்கோங்க.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நீங்கள் எப்பேர்பட்ட வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவர ஆஞ்சநேயரை இப்படி வழிபாடு செய்யுங்கள். மலை போல் வந்த துன்பம் கூட பனி போல உருகி விடும்.

மதிய நேரம் பசியில் கஷ்டப்படுபவர்கள் எத்தனையோ பேர் வீதிகளில் திரிகிறார்கள். சாலை ஓரங்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் கைகளால் இந்த தயிர் சாதத்தை கொண்டு போய் அன்னதானம் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. உங்கள் பிறவி கடனும் அடையும். நீங்கள் கைநீட்டி வாங்கிய கடனும் அடையும். மூன்று பேருக்கு இந்த தானத்தை திருப்தியோடு செய்தால் கூட போதும். அதற்கு மேல் 30 பேர் 300 பேர் என்று உங்கள் சக்திக்கு ஏற்ப இந்த அன்னதானத்தை செய்யலாம் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினத்தில் மேல் சொன்ன இந்த வழிபாடுகளை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -