குடும்பத் தலைவிகள் உச்சந்தலையில் இதை தடவிக் கொண்டால், ஏழையாக இருக்கும் குடும்பம் கூட செல்வ செழிப்பாக, பணக்கார குடும்பமாக மாறிவிடும்.

women3
- Advertisement -

பெரும்பாலும் ஆண்கள் செய்யக்கூடிய காரியங்கள், பரிகாரங்கள் கூட, அவர்களுக்கு மட்டும்தான் பலன் அளிக்கும். ஒரு பெண் செய்யக்கூடிய பரிகாரமோ, வழிபாடோ அந்த பரம்பரைக்கே பலனை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் இன்று திருமணமான பெண்கள் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். பெண்கள் இந்த திலகத்தை எடுத்து கொஞ்சமாக உச்சந்தலையில் தினமும் தடவி வர வேண்டும். அப்படி செய்தால் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, கணவரின் வருமானம் அதிகரித்து வீடு செல்வ செழிப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன திலகம். ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

செல்வ செழிப்பை உண்டாக்க பெண்கள் உச்சந்தலையில் வைக்க வேண்டிய மை:
பயந்து விடாதீர்கள். இது ஒன்றும் வசிய மை கிடையாது. வசம்பு மை. வசம்பு என்றால் நல்லதை வசியம் செய்யக்கூடியது. ஒரு சின்ன மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். அந்த தீபச்சுடரில் இந்த வசம்பை எரிக்க வேண்டும். வசம்பு அந்த நெருப்பில் கருகி தூளாக உங்களுக்கு கிடைக்கும். அதை ஒரு டப்பாவில் சேகரித்து அதில் சிறிது பசு நெய் ஊற்றி, கலந்தால் கருப்பு நிற மை கிடைக்கும். அந்த மை டப்பாவை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.

- Advertisement -

காலையில் தினமும் பெண்கள் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடிந்தவர்கள் ஏற்றலாம். வேலைக்கு செல்ல வேண்டும். அதற்கெல்லாம் நேரமில்லை என்பவர்கள் நெத்திக்கு பொட்டு இட்டுக் கொண்டவுடன், வலது கை மோதிர விரலால் அந்த வசம்பு மையைத் தொட்டு ஒரு சொட்டு உச்சந்தலையில் தடவிக் கொள்ளணும்.

இப்படி உச்சந்தலையில் இந்த மையை வைக்கும் போது குலதெய்வத்தை மனதார வேண்டி எங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வழக்கம் போல வீட்டு வேலை செய்யலாம். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் செல்லலாம். திருமணமான பெண்கள் தான் இந்த மையை உச்சந்தலையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

அவர்கள் உச்சந்தலையில் இந்த மையை வைத்துக் கொண்டு வெளியே செல்வதன் மூலம் உங்களை எந்த ஒரு காத்து கருப்போ, எதிர்மறை சக்தியோ அண்டாது. அடுத்தவர்களுடைய எதிர்மறையான பார்வையும் உங்களை தாக்காது. கண் திருஷ்டியும் விழாது. நீங்கள் ஒரு பாதுகாப்பு கவசத்திற்குள் இருப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே: கட்டு கட்டாக பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்க இன்று ஆடிச் செவ்வாய் பௌர்ணமியில் ஒரே ஒரு வெற்றிலையில் இப்படி எழுதி வைத்து விடுங்கள்.

நீங்கள் திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் இந்த மையை ஒரு சின்ன அளவு கண்ணுக்கே தெரியாமல் உங்களுடைய புருவத்தில் தடவிக் கொண்டு செல்லலாம். உங்களுக்கும் செல்வ செழிப்பு அதிகரிக்கும். திருமணம் ஆகாத பெண்கள் தங்களுடைய உள்ளங்காலில் கூட இந்த மையை வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நேரம் காலம் இல்லாமல் வயதிற்கு வந்த பெண்கள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு கண்ணுக்கு தெரியாத காத்து கருப்பின் மூலம் ஏதாவது கோளாறு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதை தவிர்க்கவும் இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -