கட்டு கட்டாக பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்க இன்று ஆடிச் செவ்வாய் பௌர்ணமியில் ஒரே ஒரு வெற்றிலையில் இப்படி எழுதி வைத்து விடுங்கள்.

mahalakshmi panam vetrilai
- Advertisement -

ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளி போன்ற நாட்களின் விசேஷத்தை பற்றி தனியாக சொல்ல தேவையில்லை. அப்படியான விசேஷமான மாதத்தில் வந்த நாட்களில் பணவரவை நமக்குத் தேடித் தரக்கூடிய இந்த பௌர்ணமி நாளும் வந்திருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்களில் வந்திருக்கும் இந்த பௌர்ணமியை பயன்படுத்தி மகாலட்சுமி தாயார் சந்திர பகவான் இருவரையும் ஒரு சேர வழிபட்டு பணவரவை பெருக்கிக் கொள்வதற்கான ஒரு அற்புதமான வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஆடிச் செவ்வாய் பௌர்ணமி வெற்றிலை பணவரவிற்கான பரிகாரம்
இந்த வழிபாட்டை நாம் சந்திர பகவானை நினைத்து செய்ய வேண்டும். அதற்கு ஒரு சிறிய தாம்பலத் தட்டு நல்ல தரமான வெற்றிலை ஒன்று ஒரு சிறிய வெள்ளி காயின் வெள்ளி காயின் அது இல்லாத பட்சத்தில் ஐந்து ரூபாய் காயின் எடுத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக வைப்பதற்கு பாலை காய்ச்சி எடுத்து அதில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி, தேன் அல்லது சர்க்கரை கலந்து தயார் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த வழிபாட்டை மாலை ஏழு மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். வீட்டில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தெய்வத்தை முதலில் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் குங்குமம் அத்துடன் ஒரே ஒரு குங்குமப்பூ சேர்த்து பன்னீர் ஊற்றி நன்றாக குலைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் வெற்றிலையின் மீது ஒரு உங்கள் வலது கையின் மோதிர விரலால் ஸ்வஸ்திக் சின்னம் வரைய வேண்டும். அதே போல் எடுத்து வைத்திருக்கும் நாணயம் அல்லது வெள்ளி காயின் மீதும் வரைய வேண்டும்.

அதன் பிறகு ஸ்வஸ்திக் சின்னம் வரைந்த வெற்றிலை ரூபாய் நாணயம் இரண்டையும் தட்டில் வைத்து அதன் மேல் கொஞ்சம் வாசனை மிக்க மலர்களை தூவி மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்த பிறகு நெய்வேத்தியமாக தயார் செய்து வைத்திருக்கும் பாலையும் வைத்து விடுங்கள். இத்துடன் வாசம் மிக்க ஊதுபத்தி ஏற்றி வைத்த பிறகு மகாலட்சுமி தாயார் முன்பு அமர்ந்து என்றென்றைக்கும் எங்களுக்கு தாராளமாக பணவரவு இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த தாம்பாள தட்டு நெய்வேத்தியமாக வைத்த பால் இரண்டையும் உங்கள் வீட்டில் நிலவொளி படும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அது மாடி அல்லது வீட்டில் ஜன்னல் எதுவோ ஆனால் அங்கு நிலவில் ஒளிப்பட வேண்டும். இதை விட துளசி மாடத்தின் வைத்தால் இன்னும் அதிக பலனை கொடுக்கும். இவையெல்லாம் வைத்து சந்திர பகவானை நோக்கி முதலில் பணவரவு தாராளமாக இருக்க வேண்டும் என மனதார வேண்டிய பிறகு நெய்வேத்தியமாக வைத்த பாலை மட்டும் கொண்டு வந்து வீட்டில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுங்கள். தட்டும் அதில் உள்ள வெற்றிலை காயின்கள் மட்டும் இரவு முழுவதும் நிலவொளி அதன் மீது படும் படி இருக்க வேண்டும்.

மறுநாள் காலையில் குளித்து முடித்த பிறகு அந்த தாம்பாள தட்டை கொண்டு வந்து மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி த ஊதுபத்தி தீபராதனை காட்டி பூஜை செய்த பிறகு இதை நீங்கள் உங்கள் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் இதை கொண்டு வைத்தால் தேவாரம் நல்ல முறையில் நடக்கும் பண வரவிற்கு தடை இருக்காது.

இதையும் படிக்கலாமே: ஆடி மாத பௌர்ணமி! பணக்கஷ்டம் தீர்ந்து செல்வ செழிப்பில் அசுர வேகத்தில் வளர்ச்சியை பெற அம்மன் கோவிலுக்கு இதை மட்டும் வாங்கி கொடுங்க போதும்.

இது அடுத்த மாதம் பௌர்ணமி வரையில் அப்படியே இருக்க வேண்டும். அடுத்த பௌர்ணமிகளும் இதே போல் பூஜை செய்து புதிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த பணவரவிற்கான வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் தவறாமல் இன்று மாலை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -