குவியல் குவியலாக, தங்கமும் பணமும் சேர, குங்குமச்சிமிழில் இந்த பொருளை போட்டு வையுங்க போதும்.

kungumam-kumkum
- Advertisement -

ஏதாவது ஒரு வகையில் வருமானம் இரட்டிப்பாக வேண்டும். வறுமையை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். வீட்டில் செல்வ செழிப்பு, மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். சந்தோஷம் வீட்டில் குறையவே கூடாது, என்பதற்காக நமக்கு எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் ஒரு எளிமையான பரிகாரத்தை தான் பார்க்கப் போகின்றோம். குங்குமம் என்றாலே அது மங்களம். மங்களம் என்றால் அது குங்குமம்.

செல்வ செழிப்பை தரும் குங்குமச்சிமிழ் பரிகாரம்:
எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக வெள்ளியில் ஒரு குங்குமச்சிமிழ் இருக்க வேண்டும். அந்த வெள்ளி குங்குமச்சிமிழ் குங்குமத்தை போட்டு வைத்தாலே வீட்டில் அத்தனை ஐஸ்வரியும் சேரும். நீங்கள் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்தாலும் சரி, செய்யவில்லை என்றாலும் சரி. உங்க வீட்ல ஒரு வெள்ளி குங்குமச்சிமிழ் குங்குமத்தை போட்டு மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடுங்கள். குடும்பம் சுபிட்சம் பெறும்.

- Advertisement -

குடும்பத்தில் ரொம்ப கஷ்டம் இருக்கிறது. கடன் தொல்லை தாங்க முடியவில்லை என்பவர்கள் வெள்ளி குங்குமச்சிமிழில் குங்குமத்தை போட்டு, பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்யும் போது பெரிய அளவில் இருக்கக்கூடிய கஷ்டம், கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ஏற்கனவே கஷ்டத்தில் நிறைய இழந்திருப்பீங்க. இனி வரக்கூடிய காலத்தில் இழப்புகள் குறைய தொடங்கும். அளவில்லா பொருள் செல்வத்தை கொடுக்கும், ஆன்மீகம் சார்ந்த குறிப்பு இதோ உங்களுக்காக.

முதலில் ஒரு வெள்ளி குங்குமச்சிமிழ் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு, அதன் மேலே குங்குமத்தை கொட்டி விடுங்கள். குங்குமத்துக்கு மேலே ஒரு துளசி இலையை போட்டு வையுங்கள். துளசி இலை காய்ந்தாலும் பரவாயில்லை. மாதத்திற்கு 1 முறை பழைய துளசி இலையை எடுத்து போட்டு விட்டு, மீண்டும் புதிய துளசி இலைகளை வைத்துக் கொள்ளலாம். இந்த குங்குமச்சிமிழ் எப்போதுமே மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி படம் இருக்கும் அல்லவா. அந்தப் படத்திற்கு முன்பாக இந்த குங்குமச்சிமிழ் வைத்து விடுங்கள். தினமும் பெண்கள் குளித்துவிட்டு வந்து இந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். குலதெய்வத்தை நினைத்து குங்குமத்தை இட்டுக்கோங்க. கூடவே மகாலட்சுமி தாயையும் நினைத்துக்கோங்க.

உங்களுடைய குடும்பம் செல்வ செழிப்போடு எப்போதும் சீரும் சிறப்புமாகவே இருக்க வேண்டும். என்ற நேர்மறை வார்த்தைகளை சொல்லி குங்குமத்தை இட்டக் கொள்ள வேண்டும். குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது குடும்ப கஷ்டத்தை சொல்லி எல்லாம் புலம்பக் கூடாது.

- Advertisement -

மாதம் ஒருமுறை துளசியை மாற்றும்போது, குங்குமத்துக்கு அடியில் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து கோவில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். மீண்டும் புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை அதில் போடலாம். ஒரு ரூபாய் நாணயம் கூட போடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இதை செய்தால் வறுமை நீங்கிவிடுமா. கடன் கரைந்து போகுமா. நிச்சயம் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: அடிக்கடி வீட்டில் இந்த குழம்பு வைத்தால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவே வராது. கணவன் மனைவிக்குள் இறுதி வரை ஒற்றுமை இருக்கும்.

குங்குமத்திற்கு நீங்கள் நினைக்கக் கூடியதை அப்படியே நிறைவேற்றி தரக்கூடிய ஆற்றல் இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாகவும் அந்த அம்பாளின் அம்சமாகவும் தான் குங்குமம் நமக்கு ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. நல்ல தாழம்பூ குங்குமத்தை வாங்கி இந்த பரிகாரத்தை செய்து வாருங்களேன். 48 நாட்களுக்குள் உங்களுடைய வீட்டில் நீங்கள் நம்பவே முடியாத ஒரு நல்லது நிச்சயம் நடக்கும். வீட்டில் ஐஸ்வரியம் பெருக இதுவும் ஒரு வழி. நம்பியவர்களை அந்த தெய்வம் என்றுமே கைவிடாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -