வீட்டில் பண வரவு அதிகரிக்க

mahalakshmi arisi panai
- Advertisement -

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க அந்த வீட்டில் தன தானியங்கள் நிறைந்து இருக்க வேண்டும். தனமானது பணத்தை குறிக்கும். தானியங்கள் என்பது உணவுப் பொருட்களை குறிக்கும். இவை இரண்டும் பற்றாக்குறை இல்லாத வீடு செல்வ வளம் மிக்க வீடாக கருதப்படுகிறது. அப்படி ஒரு வளமான வீடாக நம்முடைய வீடும் மாற இந்த எளிமையான அதே நேரத்தில் அற்புதமான பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

செல்வ வளம் அதிகரிக்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதற்கு 18 நாட்டு மருந்து கடையில் கொட்டைப்பாக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்தது 18 தரமான ஏலக்காய், 1 ஐந்து ரூபாய் நாணயம் இத்துடன் 1 தாமரை மலர் இவை தான் இந்த பரிகாரத்திற்கு தேவையானது.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பாக பூஜை அறையில் குபேரர் அல்லது மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் ஒன்றாக வைத்து ஒரு முடிச்சாக கட்டி வைத்து விடுங்கள். இந்த முடிச்சை பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து தீப தூப ஆராதனை காட்டி மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த மூட்டையை கொண்டு சென்று நீங்கள் அரிசி கொட்டி வைக்கும் பானைக்கு அடியில் வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தின் பலனை இன்னும் சிறப்பாக பெற வேண்டுமெனில் நெல் மணிகளை ஒரு பாத்திரத்தில் வாங்கி வைத்து அதில் இந்த மூட்டையை வைத்து விட்டால் இன்னும் அதிக பலனை பெறலாம். இப்பொழுது எல்லாம் நெல்முறைகளை யாரும் வாங்கி வைப்பதில்லை. அரிசியில் வைப்பதை விட நெல் பானையில் வைப்பது சிறந்தது.

- Advertisement -

ஏனெனில் தானியங்களில் ராஜ தானியம் என்ற பெருமை நெல் மணிக்கு மட்டும் தான் உண்டு. அப்பேற்பட்ட அந்த தானியத்தில் வைக்கும் போது இதனுடைய பலன் பலவகையில் அதிகரிக்கும். இந்த முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அரிசி பானையின் அடியில் அப்படியே இருக்கட்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை மட்டும் எடுத்து இதை கால்படாத இடத்தில் போட்டு விட்டு மறுபடியும் புதிதாக இதே போல செய்து வைத்து விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: இழுபறியாக இருக்கும் செயலும் வெற்றி பெற பரிகாரம்

இதில் சேர்த்து இருக்கும் அனைத்து பொருட்களும் மகாலட்சுமி தாயாருக்கும் குபேரருக்கும் உகந்த பொருட்கள். அதுமட்டுமின்றி இது பண வரவை ஈர்த்துக் கொடுக்கக் கூடிய தன்மை உடையவை இத்தகைய பொருள்கள் ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ந்திருக்கும் போது அந்த இடத்தில் செல்வ வளம் அதிகரிக்கும் பண வரவிற்கு தடை இருக்காது. வீட்டில் வறுமை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -