இழுபறியாக இருக்கும் செயலும் வெற்றி பெற பரிகாரம்

success
- Advertisement -

வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மனிதராகப் பிறந்த அனைவரும் மேற்கொள்வோம். அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிக்குரிய முடிவு என்பது நமக்கு தெரிந்தால் தான் அதனால் நமக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா என்பதை உணர முடியும். ஆனால் சில செயல்களோ அதற்குரிய முடிவுகள் தெரியாமல் என்று தெரியும் என்று பார்த்துக்கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட இழுபறியாக இருக்கக்கூடிய செயல்களும் விரைவில் முடிவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

முயற்சி திருவினையாக்கும் என்று கூறுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து தோல்வி அடைந்து விட்டால் திரும்பவும் முயற்சி செய்து வெற்றி அடைய வேண்டும் என்பதே இந்த பழமொழியின் அர்த்தம். ஆனால் இன்றைய காலத்தில் பல செயல்களில் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு முடிவே தெரியாமல் என்று முடிவு வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம்.

- Advertisement -

இதற்கு தாந்திரீக ரீதியாக சில பரிகாரங்கள் இருக்கின்றன. இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து அந்த செயலை செய்ய தொடங்கும் பொழுது அந்த செயலுக்குரிய முடிவு என்பது விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கவும் இந்த பரிகாரத்தை நாம் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த பரிகாரத்திற்காக நாம் மிகவும் சிரமப்பட வேண்டும் என்று அவசியமே இல்லை. நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய இரண்டு பொருட்களை நாம் வாயில் போட்டுக் கொண்டால் மட்டுமே போதும். எந்த ஒரு முக்கியமான செயலுக்கு செல்வதற்கு முன்பாக நம் வீட்டில் தெற்கு அல்லது தென்மேற்கு மூலையை பார்த்தவாறு நின்று கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு நம்முடைய கட்டை விரலும் சுண்டு விரலையும் ஒன்றாக வைத்து ஒரு சிட்டிகை என்று சொல்வோம் அல்லவா அந்த ஒரு சிட்டிகை அளவு இந்த ஒரு சிட்டிகை என்பது கட்டை விரலையும் சுண்டு விரலையும் சேர்த்து வைத்து எடுக்க வேண்டும். ஒரு சிட்டிகை அளவு சோம்பை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலை சேர்த்து ஒரு சிட்டிகை என்ற அளவு வெல்லத்தை எடுக்க வேண்டும். இந்த வெல்லம் குண்டு வெல்லமாக இருக்க வேண்டும். அந்த வெல்லத்தை பொடித்து வைத்துக்கொண்டு அதிலிருந்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்.

இவை இரண்டையும் நன்றாக மென்று முழுங்கி விட்டு சிறிதளவு தண்ணீரை குடித்துவிட்டு வீட்டை விட்டு கிளம்ப வேண்டும். இப்படி வீட்டை விட்டு கிளம்பிய பிறகு செய்யும் செயல் கண்டிப்பான முறையில் வெற்றியடையும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை அன்றாடம் நாம் நம் வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது செய்துவிட்டு கிளம்பினால் அந்த நாள் முழுவதும் நமக்கு நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகளை போக்கும் கோவில்

நம் வீட்டில் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி நாம் நினைத்தவை அனைத்தும் நினைத்தபடி நடைபெற நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்.

- Advertisement -