சனி தோஷம் நீங்கி செல்வ வளம் பெற மயில் இறகை உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் தெரியுமா?

selvam
- Advertisement -

பொதுவாக பலரது வீட்டில் மயில் இறகு வைத்திருப்பதை பார்த்திருப்போம். அதிலும் முக்கியமாக சிலரது வீட்டின் பூஜை அறையிலும் அவர்களது வீட்டுக் கூடத்திலும் மயிலிறகை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் முருகர் கோவிலுக்கு சென்றோம் என்றால் அங்கு மயிலிறகு விற்கப்படுவதை அதிகமாக பார்க்க முடியும். சிலருக்கு இந்த மயில் இறகை ஏன் வாங்க வேண்டும்? அதனை வாங்கி வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? என்ற பல கேள்விகள் இருக்கும். இவ்வாறு மயிலிறகை வாங்கி வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் என்ன பலன் உண்டாகும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pecock

முருகர் வாகனம்:
முருகப் பெருமானின் வாகனமாக மயில் இருக்கிறது. எனவே தான் மற்ற பறவைகளை விட மயிலை புனிதமாக பார்க்கிறோம். இதன் காரணமாகவே மயிலின் இறகையும் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறோம்.

- Advertisement -

பொதுவாக மயிலிறகை வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்திருப்பார்கள். ஆனால் அப்படி வைப்பதற்கு பலனொன்றும் இருக்காது. அதனை வைப்பதற்கென்று இருக்கும் திசையில் தான் மயில் இறகை வைக்க வேண்டும். சரியான திசையில் வைத்தால் மட்டுமே உங்களுக்கு நல்ல பலன் கிடைத்து உங்கள் வீடு எப்போதும் சுபிட்சம் பெற்றதாக இருக்கும்.

pecock1

வாஸ்து தோஷம்:
தோஷங்களை நிவர்த்தி செய்யும் சக்தி மயிலிறகிர்க்கு இருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே வீட்டின் வாஸ்து தோஷத்தையும் இந்த மயிலிறகால் நீக்க முடியும். இதற்காக 8 மயிலிறகை எடுத்துக் கொண்டு, அதனை ஒன்றாக சேர்த்து ஒரு வெள்ளை நூலினால் கட்டிக்கொண்டு, அதனை பூஜை அறையில் வைத்து, “ஓம் சிவாய நமக” என்று 108 முறை சொல்லி, தினமும் பூஜை செய்து வந்தால் உங்கள் வீட்டின் வாஸ்து தோஷம் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

சனி தோஷம்:
சனி தோஷம் உள்ளவர்களும் அவர்கள் வீட்டில் இந்த மயில் இறகை முறையாக வைத்து வழிபடுவதன் மூலம் சனி தோஷத்திலிருந்து எளிதில் விடுபட முடியும். அதற்காக 3 மயிலிறகை எடுத்துக் கொண்டு, அதனை கருப்பு நிற நூலினால் கட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். தினமும் பூஜை செய்யும் முன்னர் சிறிதளவு பாக்கை தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை மயிலிறகின் மீது தெளித்து, 21 முறை “ஓம் சனீஸ்வராய நமக” என்று சொல்லி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சனி தோஷம் நீங்கி நல்ல வளமான வாழ்வை பெற முடியும்.

sani-baghavan

செல்வம் பெருக:
என்ன தான் அதிகமாக பணம் சம்பாதித்தாலும் சில சமயங்களில் அது கையில் நிற்கவே நிற்காது. அதற்கேற்ற செலவுகள் வந்து கொண்டே இருக்கும். இந்த நிலைமையை சரிசெய்ய ஒரு மயிலிறகை நீங்கள் பணம் வைக்கும் அலமாரியில் வைத்து விட்டால் போதும். இந்த மயில் இறகின் ஆற்றல் பணம் மற்றும் நகையை பெருக்கவும், நிலைக்கவும் செய்யும்.

வீட்டின் நிலைவாசல்:
உங்கள் வீட்டில் தலை வாசலுக்கு முன்னால் இந்த மயில் இறகை ஒற்றையாகவோ அல்லது கொத்தாகவோ ஒற்றைப்படையில் வைத்து விட்டால் மிகவும் நன்மையைத் தரும். இவ்வாறு வைப்பதன் மூலம் எந்த ஒரு துர்சக்தியும், எதிர்மறை ஆற்றலலும் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும்.

nila-vasal

இவ்வாறு வீட்டிற்கு பல நன்மைகளை உண்டாக்கும் மயிலிறகை நீங்களும் தவறாமல் வாங்கி உங்கள் வீட்டில் வைத்து பயன் பெற வாழ்த்தி விடை பெறுகிறோம்.

- Advertisement -