செல்வாக்கோடு வாழ செம்பருத்திப்பூ பரிகாரம்

mahalashmi2
- Advertisement -

சமுதாயத்தில் அந்தஸ்தோடு செல்வாக்கோடு வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு இருக்கிறது. இன்றைய சமுதாயம் ஒரு மனிதனுக்கு செல்வாக்கையும், உயர்ந்த மரியாதையும் கொடுக்கிறது என்றால், அது எதற்காக. சொத்து சுகம் பண வசதி இதையெல்லாம் வைத்து தான் ஒரு மனிதனுக்கு செல்வாக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதை வைத்து தான் அவனுக்கான மரியாதையும் கொடுக்கப்படுகிறது.

நல்ல மனம் கொண்டவன், அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யாதவன், சுயநலம் அற்றவன் என்ற இந்த நல்ல குணங்கள் எல்லாம் என்றோ மறைந்து விட்டது. சரி, நாமும் செல்வாக்கில் உயிரினும். சமுதாயத்தில் செல்வாக்கோடு வாழனும். அதற்காக மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு, எந்த வேலையையும் செய்யக்கூடாது.

- Advertisement -

மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், செய்யும் வேலையில் முன்னேற, செய்யும் தொழிலில் முன்னேற, செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த திலகத்தை தினமும் நெற்றியில் இட்டு வருபவர்களுக்கு செல்வாக்கு உயரும். சமுதாயத்தில் அந்தஸ்தும் மரியாதையும் மேலோங்கி நிற்கும். செல்வாக்கை தரப்போகும் அந்த திலகத்தை தயார் செய்யும் முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

செல்வாக்கை உயர்த்தும் திலகம்

இந்த திலகத்திற்கு நமக்கு தேவையான பொருள். நல்ல வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமம், செம்பருத்திப்பூ 4, ஏலக்காய்க்கு உள்ளே இருக்கும் விதை, இந்த 3 பொருட்கள் தான் தேவை. முதலில் செம்பருத்திப் பூவை நன்றாக வெயிலில் காய வைத்து விட்டு பொடி செய்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

3 ஏலக்காய்க்கு உள்ளே இருக்கும் விதையை மட்டும் நன்றாக இடித்து நைசான தூளாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொடியையும் குங்குமத்தில் போட்டு கலந்தால், வசிய திலகம் தயார். ஆனால் இதை நெற்றியில் இட்டுக் கொள்ள ஒரு சூட்சமம் இருக்கிறது.

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். இந்த குங்குமம் பூஜை அறையில் இருக்கட்டும். குலதெய்வத்தை வேண்டி இந்த குங்குமத்தை கொஞ்சமாக எடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு, அதில் கொஞ்சமாக அரகஜா சேர்த்து கலந்து உங்களுடைய நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

- Advertisement -

அரகஜா பேஸ்ட் ஆக கலந்தால் அப்படியே நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அரகஜா பொடியாக இருந்தால் இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குழைத்து நெற்றியில் குங்குமம் போல இட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்கள் வரும். தினமும் உங்கள் செல்வாக்கு சமுதாயத்தில் உயர தொடங்கும். உங்களைப் பார்த்து ஏளனமாக பேசியவர்களும் உங்களை புகழ்ச்சியாக பேசும் அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை நிலைமை மாறும்.

அதாவது பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். மன கஷ்டத்தில் இருந்து விடுபடுவீர்கள். சில பல அவமானங்களில் இருந்தும் விடுபடக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஒரு 48 நாள் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு போங்களேன். உங்களுக்கு வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்ல மாற்றத்தை உணருவீர்கள். சில பேருக்கு நெற்றியில் இந்த சிவப்பு நிற திலகத்தை இட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இழந்த பணம் நகை சொத்து திரும்ப பெற வழிபாடு

நெற்றியில் இந்த திலகத்தை இட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளவர்கள், உச்சந்தலையில் தடவிக் கொள்ளலாம். கொஞ்சமாக நெற்றி புருவத்திலும் தடவிக் கொள்ளுங்கள். யார் கண்ணுக்கும் தெரியாமல் தடவிக் கொண்டால் போதும். பெண்களும் அதே போல தான் நெற்றியில் இந்த திலகத்தை வைக்க முடியவில்லை என்றால் உச்சம் தலையிலும் புருவத்திலும் லேசாக தடவிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -