உங்க வீட்ல இது இருந்தா கண்டிப்பா பணம் சேரவே சேராது! அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

lakshmi-cash
- Advertisement -

ஒருவருடைய வீட்டில் லட்சுமி நிலைத்து இருக்க அந்த வீட்டில் இந்த ஒரு விஷயம் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். இந்த ஒரு விஷயம் வீட்டில் இருந்தால் நிச்சயம் அங்கு செல்வ செழிப்பு குறையும் என்பது நம்பிக்கை. எவர் ஒருவருடைய வீட்டில் சுத்தமும், தூய்மையும் இருக்கிறதோ அங்கு தானாகவே லட்சுமி கடாட்சம் பெருகும். அவர்கள் இறை வழிபாடு செய்தாலும் சரி, செய்யவில்லை என்றாலும் சரி, செல்வ செழிப்பு கொழிக்கும் என்பது நம்பிக்கை.

praying-god

ஒரு சிலருடைய வீடுகளில் எல்லாம் பார்த்தால் அவர்கள் வீட்டில் ஒரு சாமி படம் கூட இருக்காது. அவர்கள் தினமும் வழிபாடு கூட செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான குறையும் இருக்காது. எல்லா செல்வங்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? நான் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும் நமக்கு ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறது என்று நீங்கள் புலம்பி இருந்தால் உங்கள் வீட்டில் இது இருக்கிறதா? என்று முதலில் பாருங்கள்!

- Advertisement -

பக்தி! வழிபாட்டில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் நிறைந்துள்ளது. மனதால் தூய்மையான பக்தியுடன் இறைவனை நினைந்து கடவுளே! என்று சொன்னாலே போதும் அவர் ஓடோடி வந்து நமக்கு உதவி செய்வார். பக்தி மட்டும் இருந்து விட்டால் போதாது, சிலரெல்லாம் எல்லா விதமான பூஜை, புனஸ்காரங்கள் செய்வார்கள். எல்லா விரதங்களையும் அனுஷ்டிப்பவர்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இதற்கும் என்ன காரணம் தெரியுமா?

ottadai

இது எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு காரணம் தான். நம் வீட்டில் இருக்கும் தூசுகள். தூசுகள் ஆங்காங்கே நிறைந்து இருக்கும் இல்லத்தில் நிச்சயமாக செல்வ செழிப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும் அது குறைந்து கொண்டே செல்லும் மேலும் மேலும் பெருகாது. செல்வச் செழிப்பான இல்லத்தில் எல்லாம் எப்பொழுதும் தூசு, தும்புகள் இல்லாமல் சுத்தமாக இருப்பதை கவனித்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.

- Advertisement -

ஆரோக்கியம், மன நிம்மதி, செல்வ செழிப்பு இந்த மூன்றுக்கும் நம்முடைய இல்லம் சுத்தமாக இருப்பது தான் முதல் படியாகும். பணம் வைக்கும் பீரோ முதல் தேவையில்லாத பொருட்களை நீங்கள் தூக்கி எறியும் பரண் வரை எங்குமே தூசுகள் இல்லாமல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கண்ணுக்கு முன் தூசுகள் தெரிந்தால் அதனை அவ்வப்போது அகற்றி விட வேண்டும். தூசிகள் இருந்தால் அந்த இல்லத்தில் மகாலட்சுமியின் அருளும் குறையும் என்பது தான் சூட்சமமான உண்மை. இல்லம் மட்டுமல்ல தொழில், வியாபாரம் செய்யும் இடத்திலும் தூசுகளை அகற்றினால் செல்வம் பெருகும்.

mahalakshmi

சுத்தம் சோறு போடும் என்று கூறப்படுவது இதனால் தான். சுத்தமாக இருந்தால் நிச்சயம் வறுமை இருக்காது. அந்த இடத்தில் செல்வத்திற்கும் குறைவிருக்காது. தூசுகள் எளிதில் நமக்கு நேர்மறை ஆற்றல்களை கிரகித்து வெளியிட்டு விடும். இதனால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், வருமான தடை, தொழில் ரீதியான பிரச்சனைகள், பகைகள், தேவையற்ற மனசஞ்சலங்கள், மன உளைச்சல்கள் ஏற்படும். எனவே வாரம் ஒரு முறையாவது உங்கள் வீட்டில் இருக்கும் தூசு, தும்புகள் அகற்றி எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ண வழிவகுக்கும் என்பதை உணருங்கள். எப்போதாவது ஒருமுறை நீங்கள் சுத்தம் செய்தால் சிரமமாகத் தான் இருக்கும். தினமும் நீங்கள் வீட்டை கூட்டும் பொழுது அதனை ஒரு முறை பார்த்து அகற்றி விட்டால் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் போய்விடும்.

- Advertisement -