பிரிந்தவர்கள் ஒன்று சேர, செல்வம் மேலும் மேலும் பெருக கிராம்பை வீட்டில் இப்படி எரித்து பாருங்கள்!

couple-cash-kirambu
- Advertisement -

மகாலட்சுமி 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதில் கல் உப்பு விசேஷமானதாக கருதப்படுகிறது. அதற்கு அடுத்தாற்போல் இந்த கிராம்பு என்கிற வாசனை பொருளும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான, மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் ஒரு தெய்வீக மூலிகைப் பொருள் ஆகும். கிராம்பு சமையலுக்கு வாசம் கொடுக்க மட்டுமல்ல, ஆன்மீக பரிகாரங்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய கிராம்பு பிரிந்தவர்களை எப்படி ஒன்று சேர்க்கும்? வீட்டில் பண மழை பொழிய செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் இந்த கிராம்பை மாலையாக கோர்த்து போடுவதைப் பார்த்திருப்போம். மகாலட்சுமிக்கு மட்டுமல்லாமல் பெருமாளுக்கு கூட கிராம்பு மாலை சாற்றி வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நியதி. கிராம்பு மாலையாக செய்பவர்கள் அடிக்கடி அதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, மாதம் ஒருமுறை மாற்றினால் போதும்.

- Advertisement -

நாம் சேமித்து வைக்கும் பணமானது எத்தனை நாட்களுக்கு நம்மிடம் நிலைத்து நிற்கும்? என்று கூறி விட முடியாது. பணத்தை எப்பொழுதும் தேவையான விஷயத்திற்கு செலவு செய்து கொண்டே இருந்தால் தான் சேரவும் செய்யும். அதை விடுத்து ஒரு இடத்தில் பணத்தை நீங்கள் தேக்கி வைத்து விட்டால், தேவையற்ற வீண் விரயங்கள் தான் வருமே தவிர, பணம் என்பது மேலும் மேலும் சேராது.

cash

நம்முடைய தேவைக்கு தான் பணம் இருக்கிறது. அதன் தேவைக்கு நாம் இல்லை என்பதை உணர்ந்து விட்டால் பணத்தை எளிதாக சேர்த்து விடலாம். ‘இறைக்கின்ற கிணறு தான் சுரக்கும்’ என்ற பழமொழி பணத்திற்கும் சரியாக பொருந்துகிறது. நீங்கள் செலவு செய்ய செய்ய பணம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். தேவையான விஷயத்திற்கு கூட செலவு செய்யாமல் பத்திரப்படுத்தி வைத்தால் அது அப்படியே தேங்கிவிடும்.

- Advertisement -

இப்படி சேமிக்கின்ற பணத்திலிருந்து அடிக்கடி நாம் வாங்க வேண்டிய மிக முக்கியமான பொருள் என்றால் அது கிராம்பு என்று கூறலாம். கிராம்பை அடிக்கடி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை சமையலுக்கு மட்டுமல்லாமல் இது போல் மாலை செய்து மகாலட்சுமிக்கு போட்டு விளக்கு ஏற்றினால் சகல செல்வங்களும் பெருகும். அதே போல பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்கு வீட்டில் வெள்ளிக் கிழமையில் இந்த தூபத்தை போட வேண்டும்.

dhoopam

நீங்கள் சாம்பிராணி தூபம் போடும் பொழுது அதில் ஒரு கிராம்பை நெய்யில் தொட்டு நெருப்பில் காட்டி எரிய விட்டு சாம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட்டால் வீடு முழுவதும் அதன் வாசம் ஒருவிதமான தெய்வீக ஆற்றலை தூண்டிவிட செய்யும். இதன் மூலம் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கை. இந்த எளிய கிராம்பு தூப பரிகாரத்தை வட மாநிலங்களில் ஒரு சமூகத்தினர் சம்பிரதாயமாகவே செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாரம் ஒருமுறை இது போல் கிராம்பை நெய்யில் தொட்டு தூபம் காட்ட வீட்டில் செல்வமானது பெருக துவங்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இது போல் அவர்கள் செய்து வருகின்றனர். மகாலட்சுமி மற்றும் பெருமாளுக்கு கிராம்பு மாலை சாற்றி இது போல் கிராம்பு தூபம் காட்டி வந்தால் எந்த சூழ்நிலையில் பிறந்தவர்களாக இருந்தாலும் மீண்டும் உங்களை வந்து இணைவார்கள் என்பது நம்பிக்கை. நம்பிக்கையோடு செய்து பயனடையலாமே!

- Advertisement -