குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்து நிற்க வெள்ளை ரிப்பனில் இந்த மந்திரத்தை எழுதி மரத்தில் தொங்க விடலாமாம் தெரியுமா?

ribbon-vishnu
- Advertisement -

குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் எப்பொழுதும் நீடித்து நிலைத்து நம்முடனேயே நிற்க இறைவனுடைய அருள் ஆசி வேண்டும். சில தாந்த்ரீக பரிகாரங்கள் செய்யும் பொழுது இவை தானாக நடக்கும் என்பது சிலருடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாம் வீட்டில் வளர்க்கும் மரங்களில் வெள்ளை ரிப்பனில் இந்த மந்திரத்தை எழுதி தொங்கவிட்டு இப்படி செய்தால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும், செல்வ வளமும் நீடிக்குமாம். நாம் அப்படி என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

maram-tree-karungali

இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு விஷயம் தான் தாவரங்கள். தாவரங்கள் அனைத்திலும் தெய்வீக தன்மை உண்டு. பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தெய்வீக ஆற்றல் உண்டு. அவ்வகையில் நாம் நம்முடைய வீட்டில் வளர்க்கும் மரம், செடிகளில் இருக்கும் தெய்வீகத் தன்மையை பெற இந்த மந்திரம் நமக்கு உதவியாக இருக்குமாம். சகல சௌபாக்கியங்களும், நோய் நொடி இல்லாத வாழ்வும் பெற இந்த எளிய மந்திரத்தை ஆறு முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

முதலில் ஒரு வெள்ளை ரிப்பனை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் கீழ் வரும் இந்த மந்திரத்தை எழுதி நீங்கள் வீட்டில் வளர்க்கும் ஏதாவது ஒரு மரத்தில் தொங்க விட வேண்டும். நீங்கள் எழுதும் எழுத்து இந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் எழுதும் பொழுது சிகப்பு நிற மையினால் எழுதி காற்றில் ஆற விடுங்கள். எழுத்து அலையக் கூடாது.

mantra-thiyanam

வசிய மந்திரம்:
சுகம் சௌபாக்யம் சௌஜன்யம் அனேகம்!!

- Advertisement -

பின்னர் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மரம் அல்லது நன்கு வளர்ந்த செடியில் காற்றில் அசையும் படி கட்டி தொங்க விடுங்கள். பின்னர் அதனை பார்த்தவாறு தினமும் மேற்கூறிய இந்த மந்திரத்தை ஆறு முறை உச்சரித்து வர வேண்டும். இந்த மந்திரத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் தங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது அந்த ரிப்பனை பார்த்தபடி 6 முறை கூற வேண்டும். இவ்வாறு செய்ய குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கலகலப்பான சூழல் உருவாக இந்த தாந்த்ரீக பரிகாரம் நிச்சயம் பேருதவி செய்யுமாம். குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கி அவரவர்களுடைய மனதில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமையாக இருக்கவும் இந்த பரிகாரம் சிறந்ததாக இருக்கும்.

fight

மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை நீக்கக் கூடிய அற்புத ஆற்றல் இந்த பரிகாரத்திற்க்கு உண்டு. சதா சர்வகாலமும் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினைகள் நடந்து கொண்டே இருந்தால் இது போல் ஒரு முறை செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். இம்மந்திரப் பிரயோகம் ஆன்மீக மற்றும் தாந்த்ரீக பரிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வசிய சக்தியை வெளியிடும் இந்த மந்திரம் கூறுவதன் மூலம் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு நம்பிக்கை உண்டாகும். அந்த நம்பிக்கையே நமக்கு எல்லாம் நல்லதே நடக்கும் என்று எண்ணத் தோன்றும். இந்த நம்பிக்கையை தூண்டி விடக்கூடிய ஒரு சாதாரண பரிகாரம் தான் இது. நீங்களும் இது போல் செய்து மாற்றத்தை காணலாமே!

- Advertisement -