பெருமாள் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கி பண மழை பொழிய இப்படி வழிபாடு செய்யுங்கள்.

perumal theertham panam
- Advertisement -

பெருமாளை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் என்றென்றைக்கும் செல்வத்திற்கு குறை இல்லாமல் இருப்பார்கள். ஏனெனில் இவர் செல்வாதிபதி என்ற நாமத்தை உடையவர். இது மட்டும் இன்றி பணக்கார கடவுள் என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஆகையால் தான் திருப்பதி சென்று வந்தால் திருப்பங்கள் நிகழும் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள்.

அப்படியான இந்த தெய்வத்தை நாம் எந்த முறையில் வணங்கி பூஜித்தால் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் இன்றி இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளபடி பூஜை செய்யும் போது பெருமாள் நம் வீட்டில் நிரந்தரமாகவே வாசம் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

பணம் கொழிக்க பெருமாள் வழிபாடு

பெருமாள் வழிபாடு என்றாலே அது சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். இதற்கு செம்பிலான ஒரு சொம்பை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சுக்கு பொடி சர்க்கரை இரண்டையும் ஒன்றாக கலந்து நிரப்பி கொள்ளுங்கள். இந்த சொம்பு பூஜையை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இதன் பக்கத்தில் துளசி தீர்த்தமும் கட்டாயம் வைக்க வேண்டும்.

அடுத்து இந்த சொம்பின் மேல் ஒரு கற்பூரத்தை வைத்து தீபம் ஏற்றி விடுங்கள். இப்போது இந்த சொம்பையே பெருமாளாகவே பாவித்து அவர் நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்கி உங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த சொம்பில் உள்ள சர்க்கரையும் சுக்கும் கலந்த கலவை வீட்டில் அனைவரும் பிரசாதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் தீர்த்தத்தையும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுங்கள். இதை வெளியில் இருக்கும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதற்கு ஏற்றார் போல் நீங்கள் சொம்பின் அளவை கூட சிறியதாக வாங்கி செய்யலாம். இதே போல வாரம் வாரம் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது பெருமாள் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கி பணம் மழை பொழிவார்.

இதையும் படிக்கலாமே: கேட்டதை கேட்ட படி அருளும் பிரபஞ்ச மந்திரம்

இத்துடன் நம் வீட்டில் நிலை வாசல் கதவை திறந்து உள்ளே நுழையும் போதே பார்க்கும்படி பெருமாள் படத்தை சுவற்றில் மாட்டி வைத்து விடுங்கள். இதற்கு எந்த பெருமாள் படத்தை வேண்டுமானாலும் வைக்கலாம். அது எந்த திசையிலும் இருக்கலாம். இதனால் வீட்டில் செல்வ வளம் அதிகரித்து காணப்படும். இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதை செய்து பாருங்கள்.

- Advertisement -