வீட்டில் பணமழை பொழிய நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமை இந்த வழிபாட்டை எந்த காரணம் கொண்டும் தவற விடாதீர்கள்.

perumal dheepam
- Advertisement -

புரட்டாசி மாதம் என்றாலே அது வழிபாட்டிற்குரிய மாதம் தான். ஆகையால் தான் அந்த மாதத்தில் நாம் வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் கூட நடத்த மாட்டோம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த புரட்டாசி மாதத்தில் கடைசி சனிக்கிழமையில் நாம் என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

நாளைய தினம் சூரிய கிரகணம் இரவு 8.34 முதல் நள்ளிரவு 2.25 வரை உள்ளது. ஆகையால் பகலில் எப்போதும் போல நம்முடை வழிபாட்டை செய்யலாம். புரட்டாசி மாதத்தில் முக்கியமான வழிபாடு எனில் அது பெருமாளுக்கு தளிகை போட்டு வழிபடுவது தான். இதை 5 வாரங்கள் வரை செய்வார்கள். ஆனால் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நாளை தான் வருகிறது. இந்த நாளில் எளிமையாக பானகம் தயார் செய்து மாவிளக்கு வைத்துக் கூட தளிகை போட்டு வழிபட்டு கொள்ளலாம். இத்துடன் இந்த எளிய வழிபாட்டையும் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு மூன்று ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பித்தளை அல்லது செம்புத் தட்டில் வைத்து மகாலட்சுமி தாயார் பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அதன் பிறகு தீபம் ஏற்றி வணங்கிய இந்த மூன்று ஏலக்காயை உங்கள் வலது கையில் வைத்து இடது கையால் அதை மூடி உங்கள் வீட்டை சுற்றி ஒரு முறை சுற்றி வாருங்கள். இப்படி சுற்றும் போதே உங்களுடைய பணத்தேவைகள் அனைத்தும் நிறைவேற வேண்டி கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த ஏலக்காயை வெள்ளை, சிவப்பு, மஞ்சள் இந்த மூன்றில் ஏதாவது ஒரு நிற துணியில் சிறிய முடிச்சாக கட்டி விடுங்கள். இந்த முடிச்சு பூஜை அறையில் இருக்கட்டும். தினமும் விளக்கேற்றும் போது இதற்கு கொஞ்சம் தூபம் மட்டும் காட்டி விடுங்கள். 21 நாட்கள் கழித்து இந்த முடிச்சை கால்படாத இடத்தில் போட்டு விட்டு விடுங்கள். இந்த 21 நாட்களுக்குள்ளாகவே உங்கள் வீட்டில் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அடுத்து இதே போல் சனிக்கிழமை காலையில் கொஞ்சம் துளசி இலையை பறித்து வைத்து விடுங்கள். இந்த வழிபாட்டை நாம் இரவு தான் செய்ய வேண்டும் ஆனால் மாலையில் துளசி இலையை பறிக்கக் கூடாது. சனிக்கிழமை இரவு உறங்க செல்வதற்கு முன்பாக ஒரு சொம்பில் பறித்த இந்த துளசி இலையை போட்டு பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் எழுந்து குளிப்பதற்கு முன்பாக இந்த தண்ணீரை வீடு முழுவதும் சுற்றி தெளித்து விட்டு நீங்கள் குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சமாக ஊற்றி குளித்து விடுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்தி வீட்டை சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் கண் திருஷ்டி போன்றவை எல்லாம் நீங்கும். இந்த தண்ணீரை இப்படி தெளிப்பது மூலம் பெருமாளின் அனுகிரகம் அனுதினமும் இருக்கும்.

- Advertisement -

இத்துடன் அன்றைய தினமே செய்ய வேண்டிய இன்னொரு தீப வழிபாட்டு முறையும் உள்ளது. அதற்கு சனிக்கிழமை அன்று மாலை ஒரு தீபம் ஏற்ற வேண்டும். ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதல் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தில் ஆறு டைமண்ட் கற்கண்டுகளை சேர்த்து விடுங்கள் போதும். இந்த தீபத்தை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக ஏற்றி வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர எளிய பரிகாரங்கள்

நாளை சனிக்கிழமை ஒரே நாளில் இத்தனை வழிபாடுகளை சேர்த்து செய்யும் பொழுது இனி வரும் நாட்களில் எல்லாம் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, பொருளாதார முன்னேற்றம் அடைந்து பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த செய்யுங்கள்.

- Advertisement -