பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர எளிய பரிகாரங்கள்.

couple fight
- Advertisement -

வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. இந்த திருமணம் ஒரு சிலருக்கு வெற்றிகரமான வாழ்க்கையும் அமைத்து தரும். ஒரு சிலருக்கு மிகவும் கடினமான வாழ்க்கையாகவும் அமைந்துவிடும். கடினமான வாழ்க்கையாக அமைந்தவர் அவர்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றுவதற்கு எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்கள் ஒன்றாக சேர்ந்தால்தான் வாழ்க்கை என்ற வண்டி நல்லபடியாக ஓடும். இதில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டால் அந்த வண்டி அப்படியே நின்றுவிடும். இதுதான் வாழ்க்கையின் தத்துவமும் கூட. இதில் யார் பிரச்சினைக்குரியவராக இருந்தாலும் அவர்களை சரி செய்வதற்கு செய்யக்கூடிய பரிகாரங்களை பார்ப்போம்.

- Advertisement -

கணவன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

தன்னுடைய மனைவி தன்னை புரிந்து கொள்ளாமல் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டால் கணவன்மார்கள் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் கோவில்களில் இருக்கக்கூடிய அரச மரத்தடியில் இரண்டு நாகங்கள் பின்னியபடி சிலைகள் இருக்கும், அந்த சிலைக்கு பால் அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் என்று அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து போன்ற நட்சத்திரங்கள் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால் அதன் பலன் மேலும் இரட்டிப்பாக கிடைக்கும்.

- Advertisement -

வீட்டிலேயே வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் வெள்ளை மொச்சையை சிறிதளவு ஒரு அகலில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட தன்னை புரிந்து கொள்ளாமல் சென்ற மனைவி விரைவிலேயே வந்து சேருவார்.

மனைவி செய்ய வேண்டிய பரிகாரம்:

- Advertisement -

கருத்து வேறுபாடு காரணமாக தன்னை விட்டு பிரிந்து சென்ற கணவன் தன்னிடம் வந்து சேர மனைவிமார்கள் கோவிலில் இருக்கும் அரச மரத்தடியில் வீற்றிருக்கும் இரண்டு நாகங்கள் பின்னிய சிலைக்கு தங்களால் முடிந்த அபிஷேகங்களை செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும். அதுவும் மிருகசிரீஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரம் இணைந்தவாறு வரக்கூடிய செவ்வாய் கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

தங்கள் இல்லங்களில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஹோரையில் ஒரு அகலில் துவரம் பருப்பை போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர பிரிந்து சென்ற கணவன் விரைவிலேயே மனம் மாறி வந்து சேருவார்.

இதையும் படிக்கலாமே: வருடத்திற்கு ஒருமுறை இந்த சக்தி பூஜையை வீட்டில் செய்தால் அனைத்து விதமான நன்மைகளும் நம்மை வந்து சேரும்.

இந்த எளிய பரிகாரங்களை கணவனும் மனைவியும் செய்துவர அவர்களுடைய வாழ்க்கை இனிமையாக அமையும்.

- Advertisement -