தடைகள் நீங்கி வருமானம் பெருக புதன்கிழமை வழிபாடு

vinayagar pachai payiru
- Advertisement -

நாட்களிலே புதன்கிழமை மிக சிறந்த நாளாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லி நம்முடைய நடைமுறையில் வந்துள்ளது. இதை வைத்தே இந்த புதன்கிழமைக்கான சிறப்புகள் என்னவென்று தெரிந்து இருக்கும். அப்படியான சிறப்பு மிக்க புதன்கிழமையில் நம்முடைய வாழ்க்கையில் உள்ள சகல துன்பங்களையும் நிவர்த்தி செய்யக் கூடிய வழிபாடுகளை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

புதன்கிழமையில் செய்ய வேண்டிய வழிபாடு

புதன்கிழமை புதன் கிரகத்திற்குரிய நாள். இந்த புதன் கிரகத்திற்குரிய அதி தேவதையாக விளங்க கூடியவர் மகாவிஷ்ணு. புதன்கிழமையில் புதன் ஹோரையில் வீட்டில் விளக்கு ஏற்றி புத பகவானை மனதார வணங்கும் போது குழந்தைகளின் கல்வி மேம்படும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி வியாபாரத்தில் முன்னேற்றம் வேண்டும்,என்பவர்கள் திருமண தடை நீங்க வேண்டும் சந்தான பாக்கியம் வேண்டும் என்பவர்கள் இந்த நேரத்தில் தீபமேற்றி புத்த பகவானை வணங்கலாம் இதன் மூலம் விஷ்ணு பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். குறிப்பாக ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு புதன்கிழமை வழிபாடு மிகவும் நல்ல பலனைத் தரும்.

புதன்கிழமை விநாயகப் பெருமானை வழிபடவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. ஏனெனில் பார்வதி தேவியார் தன் கரங்களால் விநாயகரை உருவாக்கிய தினம் புதன்கிழமை என்று புராண கதைகள் கூறுவது உண்டு. அந்த வகையில் புதன்கிழமை விநாயகருக்கும் உகந்த நாள் தான். புதன்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட நம்முடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி புதன்கிழமையில் பசுவிற்கு அருகம்புல் கொடுக்கும் போது நம்முடைய தோஷங்கள் நிவர்த்தி ஆகும் மன நிம்மதி உண்டாகும். இந்த அருகம்புல் வழிபாட்டை புதன்கிழமை மட்டுமின்றி நாம் தொடர்ந்து செய்ய செய்ய நம்முடைய வாழ்க்கையில் பல ஏற்றங்களை பெற்றுக் கொண்டே செல்லலாம்.

இத்துடன் ஒன்றரை கிலோ பச்சை பயிரை ஊற வைத்து அத்துடன் நெய் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து பசுவிற்கு உணவாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய வருமானம் பல மடங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் புதன்கிழமையில் பச்சை பயிரை தானமாக கொடுக்கலாம். திருநங்கைகளுக்கு ஆடை தானம் செய்வதின் மூலம் நல்ல பலனை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: மங்கள காரியங்கள் நடக்க அம்பிகை வழிபாடு

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காத இந்த புதன் நாளை நாம் முறையாக பயன்படுத்திக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றங்களை சந்தித்துக் கொண்டே செல்லலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -