மங்கள காரியங்கள் நடக்க அம்பிகை வழிபாடு

durgai manjal malai
- Advertisement -

நம்முடைய வேண்டுதல் நிறைவேற பல வகையான வழிபாடுகளை நாம் செய்தாலும் கூட அதையெல்லாம் நிறைவேறுவதற்கான கால நேரம் உருவாக வேண்டும். அந்த நேரத்தை உருவாக்கித் தரக் கூடிய ஆற்றல் சில தெய்வங்களுக்கு உண்டு. அப்படியான ஒரு பெண் தெய்வம் தான் துர்க்கை. இந்த துர்க்கையை நினைத்து மனதார நாம் எந்த வழிபாடு செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது பலரின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையின் பேரில் தான் இன்றளவும் வெள்ளி செவ்வாய் தினங்களில் அன்னையை மனதார வழிபாடு செய்கிறார்கள். அப்படி நாம் செய்யக் கூடிய வழிபாடுகளிலே அன்னைக்கு மிகவும் உகந்த ஒரு வழிபாட்டு முறை எப்படி செய்வது என்பதை தான் இப்பொழுது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நினைத்த காரியம் நடக்க அம்பிகை வழிபாடு

இந்த வழிபாடு நாம் வெள்ளிச் செவ்வாய் தினங்களில் தான் செய்ய வேண்டும். பொதுவாகவே பெண் தெய்வ வழிபாட்டிற்கு இந்த இரண்டு தினங்கள் தான் சிறந்தது. ஆகையால் இந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்வது சிறந்தது. துர்க்கை அன்னைக்கு ராகுகால நேரம் தான் உகந்தது. அதனால் இந்த இரண்டு நாட்களிலும் ராகு கால நேரத்திலேயே நாம் இந்த வழிபாட்டை செய்யலாம்.

இந்த வழிபாடு செய்வதற்கு நாம் அன்னைக்கு ஒரு மாலை தொடுக்க வேண்டும். அதற்கு ஒரு வெற்றிலை எடுத்து அதனுள் விரலி மஞ்சள் வைத்து நூல் கொண்டு கட்ட வேண்டும். இப்படியாக 21 விரலி மஞ்சள் 21 வெற்றிலை கொண்டு கட்டி அதன் பிறகு அதை ஒரு மாலையாக கட்ட வேண்டும். இந்த மாலையை வெள்ளிச் செவ்வாய் இரண்டு தினங்களில் ராகு கால நேரத்தில் அன்னைக்கு சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்யும் 9 வாரங்களில் உங்களால் முடிந்த வாரங்களில் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுக்கலாம். குறிப்பாக திருமண பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த முறையில் அன்னையை வழிபாடு செய்யலாம். நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற அன்னையை எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நம் வாழ்வில் நடக்குமா? என யோசித்த காரியங்கள் கூட எளிதில் நடக்கும் அதிசயங்களை அன்னை நிகழ்த்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே: வருமானம் அதிகரிக்க சூட்சம பரிகாரம்

நம்முடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறவும், தடைபட்ட காரியங்கள் நடக்கவும் மங்கள காரியங்கள் இனிதே நடைபெறவும் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் இந்த முறையில் வழிபாடு செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -