குறையாத செல்வம் கிடைக்க கணபதியை இப்படி வழிபட்டாலே போதும்.

sakthi kanapathy
- Advertisement -

செல்வம் என்பது நமக்கு மட்டும் கிடைத்து நாம் மட்டும் நலமோடு இருப்பதற்காக அல்ல. நம்முடைய பிற்கால சந்ததியினரும் அந்த செல்வத்தை அனுபவித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் நாம் ஒவ்வொருவரும் செல்வத்தை சேர்த்து வைக்க விரும்புகிறோம். அப்படி நம் தலைமுறையினரும் செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அந்த செல்வத்தை நியாயமான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி நியாயமான முறையில் செல்வத்தை சேர்க்க எந்த கணபதியை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

ஒருவர் செல்வத்தை ஈட்டுவதற்கு மூன்று வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று நியாயமான வழியில் சம்பாதிக்கும் செல்வம். அடுத்ததாக குறுக்கு வழியில் சம்பாதிக்கும் செல்வம். மூன்றாவதாக நாம் வைத்திருக்கும் சொத்தில் இருந்து நமக்கு வரக்கூடிய செல்வம். இதில் நம்மிடம் நிலையாக நிலைத்திருக்கக் கூடிய செல்வம் நியாயமான வழியில் நாம் சம்பாதிக்கும் செல்வம் தான். மற்ற செல்வங்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மை விட்டு சென்றுவிடும்.

- Advertisement -

இப்படி நியாயமான முறையில் நாம் செல்வத்தை ஈட்டுவதற்கு வணங்கக்கூடிய தெய்வமாக சக்தி கணபதி விளக்குகிறார். சக்தி கணபதியை நாம் முறையாக வழிபட்டால் அவர் நமக்கு நிலையான செல்வத்தை அருள்வார். இந்த வழிபாட்டை நாம் செய்வதற்கு நமக்கு ஒரு சக்தி விநாயகர் படம் தேவைப்படும். மேலும் இந்த வழிபாட்டை தேய்பிறை சதுர்த்தி நாளில் ஆரம்பிக்க வேண்டும்.

மிகவும் முக்கியமான விஷயம் அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட்டு இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அதற்குரிய பலனை நிச்சயம் நம்மால் அடைய முடியும். தேய்பிறை சதுர்த்தி நாளன்று மாலையில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் விநாயகருக்கு இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு “ஓம் ஹ்ரீம் சக்தி கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை மனதிற்குள் கூற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு கூறிய பிறகு ஆலயத்தில் இருக்கும் விநாயகரை நாம் மனதார வழிபட்டு விட்டு வேறு எங்கும் செல்லாமல் வீட்டிற்கு வர வேண்டும். வீட்டில் இருக்கும் சக்தி விநாயகருக்கு பொரி, அவல், கொழுக்கட்டை போன்ற ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக வைத்து அவருக்கு இலுப்பை எண்ணெயில் இரண்டு தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.

பிறகு மேலே சொன்ன அந்த மந்திரத்தை 27 முறை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு தினமும் மாலையில் சக்தி விநாயகரை தீபம் ஏற்றி நாம் வழிபட வேண்டும். முதல் நாளில் மட்டும் நெய்வேத்தியம் வைத்தால் போதும். மற்ற நாட்களில் கல்கண்டு, பேரிச்சம்பழம் போன்ற ஏதாவது ஒன்றை வைத்து நாம் வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீரவும், செல்வ செழிப்பு மேலோங்கவும் தாமரைப் பூவில் இப்படி தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

இவ்வாறு நாம் தினமும் சக்தி கணபதியை முறையாக அவருடைய மந்திரத்தை கூறி வழிபடுவதன் மூலம் அவர் நமக்கு நியாயமான வழியில் செல்வத்தை பெறுவதற்குரிய வழியை காட்டுவார். மேலும் அப்படி நாம் சம்பாதித்த நியாயமான செல்வம் நம்முடைய தலைமுறையினருக்கும் சென்றடையும் என்பது உறுதி.

- Advertisement -