கடன் பிரச்சனை தீரவும், செல்வ செழிப்பு மேலோங்கவும் தாமரைப் பூவில் இப்படி தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

thamarai poo deepam
- Advertisement -

செல்வம் அதிகரிக்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இல்லாமல் இருக்கும். அவ்வாறு செல்வம் அதிகரிக்கும் பொழுது முதலில் அவர்கள் செய்யும் வேலை அவர்கள் வாங்கிய கடனை திருப்பி அடைப்பது தான். பிறகு என்ன? குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். அப்படிப்பட்ட செல்வத்தை அதிகரிப்பதற்கு பல தாந்திரீக பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றான தாமரைப்பூ தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மிகவும் உன்னதமான பூக்களுள் ஒன்றுதான் தாமரைப்பூ. மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக தாமரைப் பூ விளங்குகிறது. மேலும் சரஸ்வதி தேவியும் வெண் தாமரையில் தான் வீற்றிருக்கிறார். கமல விநாயகர் என்று அழைக்கப்படும் கணபதியும் தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறார். மேலும் விஷ்ணு பகவான் சிவபெருமானை பூஜிப்பதற்கு தாமரை மலர்களை தான் உபயோகப்படுத்தினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

- Advertisement -

மிகவும் பரிசுத்தமாக விளங்கக்கூடியது தான் தாமரை மலர். ஆதலால் தான் தாமரை மணி மாலையை தியானத்திற்கு நாம் பயன்படுத்துகிறோம். இன்றளவும் விஷ்ணு கோவில்களில் மகாலட்சுமி தாயாருக்கும், விஷ்ணு பகவானுக்கும் தாமரைப் பூக்களை வாங்கிக் கொடுப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதுபோன்று பல விஷயங்கள் தாமரை மலரை பற்றி இருக்கின்றன. செல்வத்தை அதிகரிப்பதற்கும், கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கும் தாமரை மலரை வைத்து செய்யக்கூடிய பரிகாரம் இருக்கிறது. தாமரைப் பூவிற்கு எங்கே போவது என்று யோசிக்கிறீர்களா? இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு பூக்கள் தேவையில்லை தாமரை பூக்கோலம் இருந்தாலே போதும்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று மாலையில் தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று மாலை பூஜை அறையில் தாமரை பூ கோலத்தை பச்சரிசி மாவால் போட வேண்டும். பிறகு அந்த கோலத்தை சுற்றி எட்டு நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு திசையை பார்த்தவாறு ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு தீபம் என்ற கணக்கில் எட்டு நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி தாயாரை நினைத்து மனதார வழிபட வேண்டும். மறுநாள் காலையில் அதாவது சனிக்கிழமை அன்று காலையில் தாமரை பூக்கோலம் போட்ட பச்சரிசி மாவை எடுத்து அருகில் இருக்கும் எறும்பு புற்றில் போட்டு விட வேண்டும். இவ்வாறு நாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அஷ்ட லட்சுமிகளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, அவர்களால் நமக்கு செல்வ செழிப்பு என்பது ஏற்படும். செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. வீட்டில் நல்ல சக்திகள் அதிகரித்து, தீய சக்திகள் விலகி ஓடிவிடும்.

இதையும் படிக்கலாமே: எப்பேர்ப்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு ஒரு தேங்காய் இருந்தாலே போதும்.

இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை நாம் நம் இல்லங்களில் செய்து செல்வ செழிப்புடன் எந்தவித கவலையும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -