செல்வம் சேர குபேர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

vinayagar one rupee coin
- Advertisement -

முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்த நாளான இந்த சங்கட சதுர்த்தி வழிபாடு மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து மாலையில் விநாயகரை வழிபாடு செய்பவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியான இந்த சங்கடஹர சதுர்த்தி நாளை வியாழக்கிழமையுடன் சேர்ந்து வருவதால் இதை குபேர சங்கடஹர சதுர்த்தி என்று சொல்கிறார்கள்.

இந்த நாளில் விநாயகரை நாம் வழிபடும் பொழுது விநாயகரின் அருளோடு குபேர சம்பத்தும் சேர்த்து பெற முடியும். இதனால் நம்முடைய பெரிய பிரச்சனையான பணத் தேவைகள் நீங்கி செல்வ வளத்துடன் வாழ வழி பிறக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வம் பெருக சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

தெய்வங்களுக்கு எல்லாம் முழுமுதற் கடவுளான விநாயகர் ஒருவரை வணங்கினாலே போதும் நாம் மற்ற அனைவரும் வணங்கியதற்கான பலனை பெறலாம். குறிப்பாக வாழ்க்கையில் பெரிய அளவு மின்னலை தரக்கூடிய கேது பகவானால் வரும் தீமைகளை கூட விநாயகர் பெருமானை வணங்குவதன் மூலம்தீர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் சந்திர பகவானின் அருளையும் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய விநாயகரை நாளை மாலை எப்படி வணங்குவது என்பது பார்க்கலாம்.

இந்த வழிபாடு மேற்கொள்வதற்கு காலையில் இருந்து உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பவர்கள் இருக்கலாம். உடல் ஆரோக்கிய குறைபாடு உள்ளது . எங்களால் உபவாசம் இருக்க முடியாது என்பவர்கள் அசைவத்தை தவிர்த்து விட்டு எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை நீங்கள் உங்கள் வீட்டிலே செய்து கொள்ளலாம்.

- Advertisement -

மாலை 6 மணிக்கு வீட்டின் பூஜை அறையில் முதலில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதற்கு முன்னதாகவே விநாயகர் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அவருக்கு அருகம்புல் மாலை சாட்சி நெய்வேத்தியமாக எளிமையாக ஏதேனும் ஒரு பொருளை உணவாக படைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல்லையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இது இரண்டையும் உங்கள் வலது கையில் வைத்து நன்றாக மூடிக் கொள்ளுங்கள் கண்களை மூடி விநாயகரை மனதார நினைத்து உங்களுடைய பணப் பிரச்சனைகள் தீர வேண்டும் என்றும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நேரம் குபேரருக்கு உரிய வழிபாட்டு நேரம் என்பதால் அவரையும் மனதார நினைத்துக் வேண்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

அத்துடன் ஓம் கம் கணபதியே நமக என்ற இந்த மந்திரத்தை 108 முறை மனதார சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் அருகம்புல்லையும் உங்கள் பூஜை அறையில் வைத்துவிட்டு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த நாணயத்தையும் அருகம்புல்லையும் மூன்றாவது நாள் பூஜை அறையில் இருந்து எடுத்து நாணயத்தை அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் உண்டியில் சேர்த்து விடுங்கள் அருகம்புல்லை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

அன்றைய தினம் நீங்கள் ஆலயத்திற்கு செல்லும் பொழுது உங்களால் முடிந்த எளிமையான நெய்வேத்தியத்தை செய்து கோவிலுக்கு வருபவர்களுக்கு தானமாக கொடுங்கள் இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கை இன்னும் பிரகாசமாக மாறும். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய பணப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நல்ல பணவரவை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர மல்லிகை பரிகாரம்

அனைத்திற்கும் மூலாதாரம் விநாயகர் பணத்திற்கு அதிபதியான குபேரரையும் ஒருசேர நினைத்து செய்யப்படும் இந்த பூஜையில் நம்முடைய குடும்பம் செல்வ செழிப்புடன் விளங்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை இந்த வழிபாடு முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நாளைய தின சங்கடஹர சதுர்த்தியும் விநாயகரை இந்த முறையில் வழிபட்டு பலன் அடையலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -